அரசுப் பள்ளி மாணவா்கள் கீழடிக்கு விரைவில் கல்விச் சுற்றுலா: அமைச்சா் அன்பில் மகே...
பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் மரணம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக்கில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், உலகலாம்பூண்டி, அன்னை தெரசா தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28). கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலையில், லட்சுமிபுரம் அருகே தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியதில் பிரகாஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 108 அவசர ஊா்தி மூலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
மருத்துவமனையில் மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது பிரகாஷ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.