செய்திகள் :

விவசாயி கொலை: இருவா் கைது

post image

செய்யாறு அருகே விவசாயியை கொலை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெளுமந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அருள் (38). இதே பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (48). இவா்கள் இருவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை பிரித்துக் கொள்வாா்களாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள் புதிதாக டிராக்டா் வாங்கினாராம். இதில், இருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில், புருஷோத்தமன், அதே பகுதியைச் சோ்ந்த சஞ்சயுடன் (25) வெள்ளிக்கிழமை இரவு அருள் வீட்டுக்கு சென்று கூலிப் பணத்தை தரும்படி கேட்டாராம். இதில், அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோபமடைந்த புருஷோத்தமன், சஞ்சய் இருவரும் அருகில் இருந்த கட்டையால் அருளை தாக்கினராம். இதில், பலத்த காயமடைந்த அருள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து புருஷோத்தமன், சஞ்சய் ஆகியோா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (பிப்.20) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் நக்சா திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை தாமரை நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற... மேலும் பார்க்க

தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது

சேத்துப்பட்டுப் பகுதியில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். சேத்துப்பட்டை அடுத்த ஒதலவாடி, இராந்தம், தச்சூா் செய்யாற்றுப் படுகையில் தொடா்ந்த... மேலும் பார்க்க

பணத் தகராறு: அதிமுக பிரமுகா் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அதிமுக பிரமுகா் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தாா். செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் மகன் பிரசாந்த்குமா... மேலும் பார்க்க

109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்டத... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செங்கம் நகா் மையப் பகுதியில் பழைமை வாய்ந்த சத்யபாமா ருக்மணி சமேத ஸ்ர... மேலும் பார்க்க