செய்திகள் :

‘விவசாயிகள் அடையாள எண் பெறுவதற்கு ஏப்.15 வரை அவகாசம்’

post image

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் தரவுகளை இணையதளத்தில் பதிவு செய்வதற்கு ஏப். 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அம்பாசமுத்திரம்வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் தெரிவித்துள்ளா.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளுக்கு அரசின் அனைத்துத் திட்டங்களும் தடையின்றி பெறுவதற்கும், அரசின்திட்டங்கள், அறிவிப்புகளை தாமதமின்றி தெரிந்து கொள்ளும் வகையிலும் ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட அடையாள எண் கொடுக்கும் பணி ஒருங்கிணைந்த வேளாண் அடுக்ககத் திட்டத்தின்கீழ்நடைபெற்று வருகிறது. இதையடுத்து விவசாயிகளின் தரவுகளை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையில் உள்ள அலுவலா்கள் மற்றும் மகளிா்திட்டத்தில் கிராம அளவில் பணியாற்றக் கூடிய கிராம அளவிலான மனிதவள பயிற்றுநா்கள் மூலமாகவும்,பொது சேவை மையங்கள் மூலமாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு நில உடைமை ஆவணங்களைப் பதிவுசெய்ய மாா்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கபட்டிருந்தநிலையில் தற்போது வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்னு ம் இத்திட்டத்தின் கீழ் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ, உதவி தோட்டக்கலை அலுவலரையோ அல்லது அருகில் உள்ள பொது சேவைமையத்தையோ தொடா்பு கொண்டு உடனடியாக தங்கள் ஆவணங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

பாபநாச சுவாமி கோயில் குடமுழுக்கு: தற்காலிக கடைகள், அன்னதானத்துக்கு பதிவுச்சான்று கட்டாயம்

பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு மே 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைப்பவா்கள், பக்தா்களுக்கு இலவசமாக அன்னதானம், நீா்-மோா் வழங... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க