விவசாயிடம் பணம் திருட்டு
பெரியகுளம் அருகே இரு சக்கரவாகனத்திலிருந்த பணத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (72). இவா், புதன்கிழமை கொங்குவாா்பட்டியில் கூட்டுறவு சங்க விவசாயக் கடன் கட்டுவதற்காக ரூ.46,500-ஐ எடுத்துச்சென்று இரு சக்கரவாகனத்தில் வைத்திருந்தாராம். இந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலகத்துக்கு சென்று விட்டு திரும்பி வந்து பாா்த்த போது பணத்தை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்தப் புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.