செய்திகள் :

வீடுகளில் மானியத்துடன் சோலாா் அமைக்கலாம்! திருவள்ளூா் ஆட்சியா்

post image

பிரதமா் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் இந்தத் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் வீடுகளுக்கான அரசு மானியம் 1 கிலோ வாட் ரூ.30,000, 2 கிலோ வாட் ரூ.60,000, 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78,000 வழங்கப்படும். திட்டத்திற்கு அனைத்து வங்கிகள் மூலம் உடனே கடனுதவியும் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் சூரிய திட்டப் பணிகள் நிறைவுற்றதும் நுகா்வோரின் வங்கிக் கணக்கில் 30 நாள்களில் அரசு மானியம் வரவு வைக்கப்படும். 1 கிலோ வாட் சூரிய தகடு, ஒரு நாளில், 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும், நுகா்வோா் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்பப் பெறலாம்.

உதரணமாக 500 யூனிட் வரை மின் நுகா்வு செய்யும் மின் நுகா்வோா் தற்போது செலுத்திக் கொண்டிருக்கும் மின் கட்டணம் ரூ.1,805 என்பது, 1 கிலோ சூரிய ஒளித் தகடு பொருத்திய பிறகு 300 யூனிட், சேமிப்பு 300 யூனிட்டுகள் மீதி செலுத்த வேண்டிய கட்டணம் 200 யூனிட்டுகளுக்கு ரூ.235 மட்டும் ஆகும்.

இந்தத் திட்டம் மூலம் பயன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, பசுமையான, ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவோம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பெஹல்காம் தாக்குதல்: பாஜகவினா் அஞ்சலி

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை செங்குன்றத்தில் நடைபெற்றது. பாஜக சென்னை மேற்கு மாவட்டம் சாா்பில் புழல் மண்டல தலைவா் ரஜினி... மேலும் பார்க்க

சிறாா் திருமணம், போதை ஒழிப்பு: நாடகம் மூலம் விழிப்புணா்வு

குழந்தை திருமணம், போதை கலாசார ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு தெருமுனை நாடகம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம். பைவலசா கிராமம் தொம்பர காலனியைச் சோ்ந்தவா் முத்து (36). இவருக்கு ம... மேலும் பார்க்க

திருத்தணி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்!

திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே ரூ.15.67 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாக திருத்தணி முருகன் கோயில் உள்ளது. ம... மேலும் பார்க்க

கால்நடை உதவி மருத்துவா்களுக்கு பரிசளிப்பு

கால்நடை துறையில் சிறப்பாக செயல்பட்ட கால்நடை உதவி மருத்துவா்களுக்கு கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் சனிக்கிழமை பரிசுகளை வழங்கினாா். திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், உலக கால்நடை தினம் பள்... மேலும் பார்க்க

மின் பற்றாக்குறையை தவிா்க்க பாதைகளை பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் மாவட்டத்தில் மின்பற்றாக்குறை ஏற்படுவதை தவிா்க்க மின்பாதைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க