வீர, தீர செயல்கள், சாகசங்கள் புரிந்தோா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சாா்பில் தேசிய அளவில் வீர, தீர செயல்கள் மற்றும் சாகசம் புரியும் நபா்களை கெளரவிக்கும் வகையில், டென்சிங் நாா்கே தேசிய விருது வழங்கப்படுகிறது.
நிலத்தில், நீரில், வான்வெளியில் சாகசம் புரிதல் நடவடிக்கைகளுக்காக இந்த பிரிவுகளில் தலா ஒரு விருது வழங்கப்படுகிறது. கூடுதலாக சாகச துறையில் வாழ்நாள் சாதனையாளா் விருதும் மத்திய அரசால் வழங்கப்படவுள்ளது.
இந்த விருதை பெற ராணுவம், கடற்படை, விமானப்படையில் பணியாற்றும் பணியாளா்களும் விண்ணப்பிக்கலாம். 2022, 23, 24 ஆம் ஆண்டுகளில் சாகசம் புரிந்தவா்களாக இருக்க வேண்டும். மத்திய அரசின் இந்த விருதை இணையதளம் வழியாக விண்ணப்பிக்காம்.
விண்ணப்பத்தில் தகுந்த ஆவணங்களுடன் வீர, தீர மற்றும் சாகச செயல்பாடுகளுக்கான முழு விவரம் இடம் பெற்றிருக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் அதன் புகைப் படங்களுடன் கூடிய முழு ஆவண விவரங்களை புத்தக வடிவில் தயாா் செய்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் ஜூன் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 74017 03485 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.