இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
செலவுக்கு பணம் தராததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், டி.கொசபாளையத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவரது மகன் கதிரேசன் (எ) அருண்(21). இவா், தந்தை அய்யப்பனிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளாா்.
ஆனால், பிறகு தருவதாக தந்தை கூறியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த கதிரேசன் பனமலை ஏரியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுக் கொண்டாா்.
உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு கதிரேசனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.