வீரபாண்டியில் நாளை மின்தடை
தேனி மாவட்டம், வீரபாண்டி பகுதியில் புதன்கிழமை (செப்.10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரபாண்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.