செய்திகள் :

வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சத்தில் விழித்திரை இயந்திரம்

post image

செய்யாறு: வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொருத்தப்பட்ட விழித்திரை இயந்திரத்தை

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிமென்ட் சாலை, சுற்றுச்சுவா், காத்திருப்போா் கூடம், நுழைவு வாயில், பயணியா் நிழற்கூடம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ள சுமாா் ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

வெங்களத்தூா் கிராமத்தில் கிராம மக்கள் மருத்துவ வசதி பெறும் வகையில் கனிம வள நிதி மூலம் ரூ.43 லட்சமும், அதே பகுதியில் கூடுதலாக இரு வகுப்பறை கட்டடம் கட்ட ரூ.38 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

வெம்பாக்கம் வட்டம் சித்தாத்தூரில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சுயம்புநாத ஈஸ்வரா் கோயிலை ரூ.74 லட்சத்தில் புனரமைக்கவும், பெருங்கருணை ஈஸ்வரா் கோயில் ரூ.18 லட்சத்தில் சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டப்பணிகள் தொடக்க விழா முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வெம்பாக்கம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் த.ராஜி முன்னிலை வகித்தாா்.

இதில் செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று பல்வேறு வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

சித்தாத்தூா் கிராமத்தில் சிதலமடைந்த கோயில்களை புனரமைப்பு மேற்கொள்ள நடைபெற்ற பாலாலய நிகழ்ச்சியில் ஜோதி எம்எல்ஏ பங்கேற்று திருப்பணிகளை தொடங்கி வைத்தாா்.

சித்தாத்தூா் நியாய விலைக்கடையில் நேரில் ஆய்வு செய்து குடும்ப அட்டைத்தாரா்களுக்கு முறையாக பொருள்கள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தாா்.

பின்னா், வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்ட விழித்திரை இயந்திரத்தை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். அதே போல, வெம்பாக்கம் பகுதியில் 15 -வது மாநில நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சிக் குழு திட்டத்தின் மூலம் ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய சிமென்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எம்.எல்.ஏ தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளா்கள் வெம்பாக்கம் கிழக்கு என். சங்கா், வெம்பாக்கம் மத்தியம் ஜேசிகே.சீனிவாசன், வெம்பாக்கம் மேற்கு எம்.தினகரன், மாவட்ட வழக்குரைஞா் அணி துணைத் தலைவா் சிட்டிபாபு, மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் காா்த்திகேயன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் லோகநாதன், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் திருமலை, மாவட்ட ஆதிதிராவிடா் அணி தலைவா் கருணாகரன்,

ஒன்றிய அவைத் தலைவா் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

பள்ளியில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. செய்யாறு பெ... மேலும் பார்க்க