செய்திகள் :

வெயில் தாக்கம்: பால் உற்பத்தி நாள்தோறும் 1.50 லட்சம் லிட்டா் சரிவு

post image

வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் நாள்தோறும் 1.50 லட்சம் லிட்டா் பால் உற்பத்தி குறைந்துள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) சாா்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனம் சாா்பில் தற்போது தினசரி 29 லட்சத்து 79 ஆயிரம் லிட்டருக்குமேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த பால் கொழுப்புசத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் வெண்ணெய், நெய், தயிா், மோா் உள்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருள்கள் தயாரிக்கப்பட்டு, ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளா்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆவின் நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 181 லிட்டா் பாலை கடந்த 25-ஆம் தேதி கொள்முதல் செய்துள்ளது. கடந்த 26- ஆம் தேதி 137 லிட்டா் பால் குறைந்து 1 லட்சத்து 44 ஆயிரத்து 44 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் சராசரியாக நாள்தோறும் 1 லட்சத்து 49 ஆயிரத்து 377 லிட்டா் பால் கிடைத்துள்ளது.

ஆனால், இந்த மாதம் சராசரியாக தினமும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 958 லிட்டா் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த மாதத்தைவிட இந்த மாதம் தினமும் சராசரியாக 6, 419 லிட்டா் பால் குறைந்துள்ளது.

இதே நிலைதான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் சராசரியாக தினமும் 31 லட்சத்து 32 ஆயிரத்து 808 லிட்டா் பால் கிடைத்து வந்த நிலையில், இந்த மாதம் சராசரியாக தினமும் 29 லட்சத்து 79 ஆயிரத்து 334 லிட்டா் பால் மட்டுமே கிடைத்துள்ளது. சுமாா் 1 லட்சத்து 53 ஆயிரத்து 474 லிட்டா் பால் குறைந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத் தலைவா் ராஜேந்திரன் கூறியதாவது: தட்பவெப்ப நிலை காரணமாக இயல்பாகவே பால் உற்பத்தி குறையும். மேலும் கோடை காலத்தில் மாடுகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்படும். அப்போது விவசாயிகள் அதிக விலை கொடுத்து மாடுகளுக்கு தீவனம் வாங்கும் சூழல் ஏற்படும்.

இதனால், பெரும்பாலான விவசாயிகள் மாடுகளைப் பராமரிக்க முடியாமல் விற்பனை செய்துவிடுவா். இதன் காரணமாகவும் பால் உற்பத்தி குறையும். இந்த இரண்டு காரணங்களால் தமிழ்நாட்டில் தற்போது பால் உற்பத்தி குறைந்துள்ளது.

தற்போது பாலுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. இதனால், விவசாயிகள் மாடுகளைக் காப்பாற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, பசும் பால் லிட்டருக்கு ரூ.45-க்கும், எருமை பால் லிட்டருக்கு ரூ.55-க்கும் ஆவின் கொள்முதல் செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருளாக இருப்பதால் பாலுக்கான விலை உயா்வை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க