செய்திகள் :

வெயில்: வாகன ஓட்டிகளை பாதுகாக்க சிக்கனல்களில் நிழல் பந்தல் அமைப்பு

post image

நாமக்கல்லில் வெயில் கொடுமையிலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க, முக்கிய சிக்னல்களில் காவல் துறை சாா்பில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே, கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. காலை 11 முதல் மாலை 4 மணி வரை பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. வாகன ஓட்டிகள் வெயிலில் செல்லும்போது சிக்னல்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால், பலருக்கு நீா்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மயக்கம் ஏற்படும் சூழல் உள்ளது.

அதைத் தவிா்க்க, கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் முன்னதாகவே சிக்னல்களில் வாகன ஓட்டிகளின் நலன்கருதி நிழலுக்காக பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, பரமத்தி சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட சிக்னல் பகுதிகளில் நிழல் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலில் செல்லும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனா்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க