செய்திகள் :

வெற்றிகள் கிடைக்க...

post image

தாமிரவருணி கரையில் சிறப்புமிக்கத் தலங்களில் வெள்ளூர் நடுக்கர் கோயில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட நவலிங்கபுரங்களில் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தின் பழம்பெருமையை பறைசாற்றும் வகையில், பெருமாள் கோயிலும், சிவன் கோயிலும் அமைந்துள்ளன. பசுமைநிறைந்த கிராமத்துக்குள்ளே நீர்சுனைகள் கொண்ட தெப்பக்குளத்தின் பின்புறம் பிரம்மாண்டமாக சிவன் கோயில் உள்ளது. இங்கு சிவனை முருகன் வழிபட்டுள்ளார். இந்த ஊர் "வேல்லூர்' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி "வெள்ளூர்' என அழைக்கப்படுகிறது.

இரண்டு சிவனடியார்களுக்கு இடையே யார் சிறந்தவர் என்ற வழக்கு ஏற்பட்டது. இதை யாராலும் தீர்க்க முடியாத நிலையில், சிவன் துறவி போல் தோன்றி விசாரித்து, "பக்தியில் இருவரும் சரிசமமானவர்களே' என்று தீர்த்து வைத்தார். துறவி வடிவில் இறைவன் வந்து தீர்ப்பு அளித்ததால், "மத்தியபதீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். இந்த ஊர் "வேலூரான மதுரோதையபுரம்' என்றும் "வெள்ளூரான மதுரோதைய

புரம்' என்றும் இரண்டு வகையான பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளன.

பாண்டிய மன்னர் கால வீரபாண்டிய சடவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புடைய இந்தக் கோயிலில் மீன் சின்னங்கள் கோயில் மண்டபங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. வேல் சின்னம் உருவங்களும், வேலூர் என்பதின் அடையாளமாகக் காணப்படுகிறது. 934}இல் இந்தக் கோயில் கட்டப்பட்டு 1091 ஆண்டுகள் பெருமையும், பழைமையும் வாய்ந்தது.

ஒளி வடிவமானவர் "நக்கர்' என்ற பொருளுக்கேற்ப மூலவர் நடுக்கர் சந்நிதிக்குள் வித்தியாசமான ஒளி பரவுவதை பக்தர்கள் உணர்கின்றனர். புதுக்குடியில் உள்ள வடநக்கர் கோயில் சிதைவுற்றதால், அங்குள்ள மூலவர் இந்தக் கோயிலின் இடதுபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். தென் கிழக்கு மூலையில் "கங்கை அம்மன்' என்ற துர்க்கையின் கற்சிற்பம் உள்ளது. "கோயிலில் வழிபட இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் உள்ளிட்டவை கிடைக்கும். தலையில் கிரிடத்துடன் காணப்படும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், வெற்றிகள் கிடைக்கும்' என்பது ஐதீகம்.

கோயிலின் மாசித் திருவிழா} தெப்பத் திருவிழா பிப். 28}இல் தொடங்கி, மார்ச் 12 வரை நடைபெறுகிறது. மார்ச் 8}இல் தேரோட்டமும், 10, 11}ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

தி.நந்தகுமார்

அருள் தரும் தட்சிணாமூர்த்தி

சிவனின் 25 திருமேனிகளில் ஒன்பதாவதாக இடம்பெறுபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. நட்சத்திரங்கள் 27 என்பதற்கேற்ப கருவறைக் கோயில் தரையில் இருந்து, உச்சிக்கோபுரக் கலசத்தின் உயரம் 27 அடியாகும். 9 கிரகங்களுக்கு அதிபத... மேலும் பார்க்க

கேட்டது கிடைக்கும்...

போர்க் களத்தில் தனக்கு உதவி புரிந்த கைகேயிக்கு இரு வரங்கள் தருவதாக தசரதன் அளித்த வாக்குறுதியால், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றார். சீதையும், லட்சுமணனும் உடன் சென்றனர். ராமரின் பாதுகைகளை சிம்மாசனத்த... மேலும் பார்க்க

கட்டெறும்பு காட்டிய காசி விசுவநாதர்

தென்பாண்டி நாட்டில் 15}ஆம் நூற்றாண்டில் விந்தன்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன். வாரணாசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார். முருகன் அருளால், அனிமா... மேலும் பார்க்க

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 28 - ஏப்லல் 3) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)முயற்சிகள் முன்... மேலும் பார்க்க

சென்னையில் ஐயப்பனின் முதல் கோயில்...

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சென்னையில் உள்ள ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் கோயிலாகும். சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வழிகாட்ட "ஐயப்ப பக்தர்கள் சபா' 1968 }இல் ... மேலும் பார்க்க

தோஷங்கள் போக்கும் தேவர் மலை

பிரகலாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒருநாள் இரணியன், ""உன் ஹரி எங்கிருக்கிறான்'' எனக் கேட்டு, பதில் இல்லை. ""இந்தத் தூணில் இருக்கின்றானா?'' எனக் கேட்டார் இரணியன். ""தூணிலும் இருப்பான் துரும... மேலும் பார்க்க