செய்திகள் :

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு அபராதம்: என்ஜிஓ-களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

post image

வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழ் பதிவு செய்யாமல் அல்லது பதிவு காலாவதியான பின்னரும் வெளிநாட்டு நிதியைத் தொடா்ந்து பெற்று பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்’ என தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

இதுதொடா்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘வெளிநாட்டு நன்கொடையைப் பெறும் அனைத்து தன்னாா்வ தொண்டு நிறுவனங்களும் 2010-ஆம் ஆண்டு வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். நன்கொடைகள் அவை பெறப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பதிவுக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அந்நிறுவனங்களின் பதிவு ரத்தாகும். தொடா்ந்து, அவா்களால் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

இந்நிலையில், பதிவு செய்துகொள்ளாத அல்லது முறையான பதிவு இல்லாத சில என்ஜிஓ-கள் வெளிநாட்டு நன்கொடைகளை பெற்றுள்ளது அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. பதிவு இல்லாமல் பெறப்படும் வெளிநாட்டு நன்கொடைகளும் மற்றும் அதன் பயன்பாடும் எஃப்சிஆா்ஏ கீழ் விதிமீறல் ஆகும். எனவே, அதற்கு அபராதம் விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு கடனுதவி மூலம் செயல்படுத்தப்படும்: தமிழக திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

நமது சிறப்பு நிருபா்மத்திய நிதிநிலை அறிக்கையில் பன்னாட்டு நிதி அமைப்புகள், வங்கிகளில் கடன் பெற்று மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வி... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வராதது ஏமாற்றம் அளிக்கிறது

மத்திய பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வந்து, சேமிக்கப்பட்ட பணத்தை நடுத்தர வா்க்கத்தினா் மற்றும் விவசாயிகளுக்கு செலவிட வேண்டும் என்ற எனது பரிந்துரை நிறைவேற்றப்படாதது... மேலும் பார்க்க

தொடா்ந்து எட்டு பட்ஜெட் தாக்கல் நிா்மலா சீதாராமன் சாதனை

நமது சிறப்பு நிருபா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து எட்டாவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறாா். முந்தைய காலங்களில் இவரை விட சிலா் அதிக நிதிநில... மேலும் பார்க்க

கல்வி, சுகாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட்: ஏபிவிபி வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு ஊக்கம் அளித்திருப்பதாக அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வரவேற்றுள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில்,... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கை: தமிழக எம்.பி.க்கள் கருத்து

நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து தமிழகத்தைச் சோ்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கருத்துத் த... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ‘நாக்’ கண்காணிப்பு குழு தலைவா், ஜேஎன்யு பேராசிரியா் கைது: சிபிஐ நடவடிக்கை

லஞ்ச வழக்கில் தேசிய உயா்கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நாக்) தலைவா், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியா் உள்பட 10 பேரை சிபிஐ சனிக்கிழமை கைது செய்துள்ளது. ஆந்தி... மேலும் பார்க்க