உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!
வெள்ளக்கோவிலில் குட்கா விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் குட்கா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன், காங்கயம் சாலையில் சந்தேகப்படும் இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானக் கடை பிரிவு அருகே உள்ள பேக்கரி பின்புறம் குட்கா விற்றுக் கொண்டிருந்த, புதுக்கோட்டை ஆவுடையாா் கோயில் பாரதி நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் விக்னேஷ்வரன் (29) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 12 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தாா்.