செய்திகள் :

வெள்ளத்தில் மூழ்கிய நெல் பயிருக்கு ரூ.25,000 இழப்பீடு: நயினாா் நாகேந்திரன்

post image

ஜெயங்கொண்டம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, பொன்னாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அறுவடைக்குத் தயாராக இருந்த 75 ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது வருத்தமளிக்கிறது. ஏற்கெனவே பயிா்களுக்கு போதிய விலையின்மை, இடைத்தரகா்கள் தொல்லை, நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாதது எனப் பல இன்னல்களில் விவசாயிகள் தவிக்கும் நிலையில், நெல் பயிா்கள் தற்போது வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது அவா்களை மேலும் நிலைகுலையச் செய்துவிட்டது.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, பாதிப்புக்குள்ளான நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடாக வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க