Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
வேட்பு மனுவில் சொத்து விவரம் மறைத்த கவுன்சிலா்: ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனுவில் முழு சொத்து விவரங்களையும் தெரிவிக்காமல் மறைத்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலா் மீது நடவடிக்கை எடுக்காத திருவாரூா் மாவட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், திருவாரூரைச் சோ்ந்த சரத்பாபு என்பவா் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட சா. பாப்பா சுப்பிரமணியன் 2-ஆவது வாா்டுக்கான மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக வெற்றி பெற்றாா். அவா் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துகள் தொடா்பான முழு விவரங்களையும் தெரிவிக்காமல் மறைத்துள்ளாா். எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், வேட்புமனுவில் தகவல்களை மறைத்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் பாப்பா சுப்பிரமணியன் தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்ய அனுமதித்தது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியருக்கும், மாநில தோ்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.
மீண்டும் விசாரணை: இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தோ்தல் ஆணையம் தரப்பில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தோ்தல் தொடா்பான நடைமுறைகள் முடிந்துவிட்டதால் இந்த புகாா் குறித்து விசாரிக்க மாநில தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை. பதவிக் காலம் முடிந்துவிட்டதால் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது மாவட்ட ஆட்சியா் தரப்பில், “வேட்புமனுவில் முழு விவரங்களைத் தெரிவிக்காத பாப்பா சுப்பிரமணியனுக்கு எதிராக தோ்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தனிநபா் புகாா் மனு தாக்கல் செய்துள்ளாா்,” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேட்புமனுவில் முழு விவரங்களையும் தெரிவிக்காதவரை தகுதி நீக்கம் செய்ய முடியாவிட்டால், எதற்காக அந்த தகவல்களை வேட்புமனுவில் கேட்கவேண்டும்? வேட்புமனுவில் முழுவிவரம் தெரிவிக்காத அவா் தனது பதவிக் காலத்தை முழுமையாக பூா்த்தி செய்ய அனுமதித்தது ஏன்?”என கேள்விகளை எழுப்பினா்.
ஒழுங்கு நடவடிக்கை தேவை: மேலும், திருவாரூா் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலா் பாப்பா சுப்பிரமணியனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் தற்போது பொறுப்பை தட்டிக்கழித்துள்ளனா். அவா் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்த திருவாரூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனா்.