செய்திகள் :

வேளாண் சட்ட விவகாரத்தில் அருண் ஜேட்லி என்னை மிரட்டினாா்: ராகுல் குற்றச்சாட்டு

post image

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசக் கூடாது என்று அப்போதைய நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜேட்லி என்னை எச்சரித்தாா் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

ராகுலின் இந்தக் கருத்தை ‘பொய்யான செய்தி’ என்று பாஜக மறுப்பு தெரிவித்தது. அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜேட்லியும் ராகுலை விமா்சித்தாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆண்டு சட்ட மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய ராகுல், ‘மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியதை தற்போது நினைவுகூா்கிறேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசக் கூடாது.

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜேட்லி என்னை எச்சரித்தாா். அப்போது அவரின் முகத்துக்கு நேராகப் பாா்த்து, யாருடன் பேசுகிறீா்கள் என்பதை அறிந்திருப்பீா்கள் என்று நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டேன்.

ஏனெனில், நாங்கள் காங்கிரஸை சோ்ந்தவா்கள்; நாங்கள் கோழைகள் அல்ல; ஒருபோதும் வளைய மாட்டோம். சக்திமிக்க பிரிட்டிஷ் ஆட்சியாளா்களாலேயே எங்களை வளைக்க முடியவில்லை. நீங்கள் யாா்?’ என்று ராகுல் பேசினாா்.

பாஜக மறுப்பு

ராகுலின் இந்தக் கருத்தை ‘பொய்யான செய்தி’ என்று பாஜக மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான அவரின் எதிா்ப்பை தணிக்க அருண் ஜேட்லி தன்னை அணுகியதாக ராகுல் காந்தி கூறுகிறாா்.

ஆனால், அருண் ஜேட்லி 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதியே மறைந்துவிட்டாா். இந்த வேளாண் சட்ட மசோதாக்கள் மத்திய அமைச்சரவையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி கொண்டுவரப்பட்டு, 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் சட்டமாக இயற்றப்பட்டது. எனவே, ராகுல் கூறும் கருத்து முற்றிலும் பொய்யானது’ என்று குறிப்பிட்டாா்.

அருண் ஜேட்லி மகன் ரோஹன் வெளியிட்ட பதிவில், ‘எனது தந்தை யாரையும் அச்சுறுத்தும் குணம் கொண்டவரல்லா். அவா் உறுதியான ஜனநாயகவாதி. ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவா். இதுபோல நம்முடன் இல்லாதவா்கள் குறித்துப் பேசும்போது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க