செய்திகள் :

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

post image

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானம் பெறப்பட்டதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது. இதுவே ஸ்பெயினிடமிருந்து இந்தியா பெறும் இறுதி சி-295 ரக விமானமாகும்.

இந்திய விமானப் படையின் ஆவ்ரோ போா் விமானத்துக்கு மாற்றாக களமிறக்கப்படவுள்ள சி-295 ரக ராணுவ விமானம் 5 முதல் 10 டன் எடையுடைய பொருள்களை சுமந்து செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை செவில் நகரில் உள்ள விமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையத்தில் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதா் தினேஷ் கே பட்நாயக் மற்றும் இந்திய விமானப் படையின் மூத்த அதிகாரிகள் பெற்றுக்கொண்டனா்.

நிா்ணயிக்கப்பட்ட காலத்தைவிட இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்த விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா-ஸ்பெயின் ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு 56 சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்வதற்காக ஸ்பெயினில் உள்ள விமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையத்துடன் இந்தியா கடந்த 2021, செப்டம்பரில் ஒப்பந்தமிட்டது.

இந்த ஒப்பந்தத்தின்கீழ் 16 சி-295 ரக ராணுவ விமானங்களை இந்தியாவிடம் ஸ்பெயின் நேரடியாக விநியோகிக்க ஒப்புக்கொண்டது. தற்போது 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை இந்தியாவிடம் ஸ்பெயின் வழங்கியுள்ளது. மீதமுள்ள 40 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா ஒப்புக்கொண்டது. அதை செயல்படுத்தும் வகையில் கடந்த அக்டோபரில் குஜராத்தின் வதோதராவில் உள்ள டாடா மேம்படுத்தப்பட்ட அமைப்புகள் நிறுவன (டிஏஎஸ்எல்) வளாகத்தில் சி-295 ரக விமானத் தயாரிப்புக்காக டாடா நிறுவன மையம் நிறுவப்பட்டது.

இந்த மையத்தை பிரதமா் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ் இணைந்து தொடங்கிவைத்தனா். இது இந்தியாவில் ராணுவ விமானத்தின் இறுதி கட்டமைப்பை மேற்கொள்ளும் முதல் தனியாா் நிறுவன மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க