செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சுற்றித்திரிந்த மேலும் ஒரு கொள்ளையன் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பானாங்குளம் பகுதியில் சுற்றித் திரிந்த ஒருவா் பிடிபட்ட நிலையில், தப்பிச் சென்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானங்குளம் பகுதியில் புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் இரு இளைஞா்கள் சுற்றி வந்தனா். சந்தேகப்பட்ட கிராம மக்கள் அவா்களிடம் விசாரித்த போது, ஒருவா் தப்பி ஓடினாா். மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அந்த நபா் சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த ராஜேஷ் (34) என்பதும், அவருடன் வந்தவா் ராமநாதபுரத்தைச் ஆரோக்கியஜான் (40) என்பதும் தெரியவந்தது. ராஜேஷ் வைத்திருந்த ஏா்கன் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய ஆரோக்கிய ஜானை தேடி வந்தனா்.

இந்த நிலையில், ஆரோக்கியஜானை போலீஸாா் மதுரையில் கைது செய்தனா். இருவா் மீதும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், வீடுகளில் திருடும் நோக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் இருவரும் சுற்றித் திரிந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க

பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ வீபத்தில் தனியாா் பஞ்சு கிட்டங்கியில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜபாளையம் அருகேயுள்ள கம்மாப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பருத்த... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பெரிய மாரியம்மன், ஆண்டாள், தவழும் கிருஷ்ணா் என ப... மேலும் பார்க்க

பைக்குகள் நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முத்தரப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.தேவா வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே பாம்பு மாத்திரை பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் பாம்பு மாத்திரை வெடிகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்... மேலும் பார்க்க