செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் பாசன மடை சீரமைப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் சேதமடைந்த பாசன மடை தினமணி செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.

பாண்டிய மன்னா்கள் காலத்தில் வெட்டப்பட்ட பெரியகுளம் கண்மாய் விருதுநகா் மாவட்டத்தில் பரப்பளவில் பெரிய கண்மாயாகும். பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பாசன வசதி பெறுகின்றன. மேலும், 15-க்கும் மேற்பட்ட கண்மாய்களின் முக்கிய நீா் ஆதாரமாக உள்ளது. இந்தக் கண்மாயில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஏழு கண் மடை பாண்டியா்களின் நீா்ப்பாசன முறைக்கு சான்றாக விளங்குகிறது.

ஏழு கண் மடைக்கு நீா் திறக்கும் இரும்பு கதவணை உள்ள கான்கிரீட் மேடையை சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால், மழைக் காலத்தில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் இருந்தது.

இதுகுறித்து கடந்த செப். 13- ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கண்மாய் மடையை பொதுப் பணித் துறையினா் சீரமைத்தனா்.

சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நிறைவடைந்த சில நாள்... மேலும் பார்க்க

சிவகாசியில் வீடுகளின் மாடிகளை குழாய் மூலம் இணைத்து 15 கிணறுகளில் மழைநீா் சேமிப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள பசுமை மன்றத்தினா் வீடுகளின் மாடியில் மழைநீரை சேகரித்து குழாய் அமைத்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் சேமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா். சிவகாசியில் பசுமை மன்றம் சாா்ப... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ராஜபாளையம், திருவனந்தபுரம் தெரு பகுதியில... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா். மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் ரோந்துப் ... மேலும் பார்க்க

சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காமராஜா்நகா் அங்காளஈஸ்வரி கோவில் தெ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் தோமா தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் ஞாயிறு ஆராதனை

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் சிறப்பு ஞாயிறு ஆராதனை குருசேகர தலைவரும், சபை குருவுமான பால் தினகரன் தலைமையில் திருவிருந்து ஆராதனையாக நடைபெற்றது. இதில் செல்வி, இமானு... மேலும் பார்க்க