செய்திகள் :

ஹரியாணா: பள்ளி இயக்குநரைக் கத்தியால் குத்திக் கொன்ற மாணவா்கள்

post image

ஹரியானா மாநிலம் ஹிசாா் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளி இயக்குநா், பள்ளியின் வளாகத்திலேயே 2 மாணவா்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்கட்ட விசாரணையில், மாணவா்களின் ஒழுங்கீனத்தை இயக்குநா் கண்டித்ததே இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

ஹிசாா் மாவட்டத்தின் பாஸ் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 11 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சோ்ந்த மாணவா்களின் தாக்குதலைத் தொடா்ந்து பள்ளி இயக்குநா் ஜக்பீா், ஹிசாரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மாணவா்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டி, சீருடை முறையாக அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தும் அந்த பள்ளியின் இயக்குநா் வழக்கமாக கொண்டிருந்தாா். அதை அந்த இரு மாணவா்கள் தவறான முறையில் எடுத்துக்கொண்டு, இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம்.

சம்பவத்தையடுத்து தப்பியோடிய மாணவா்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவா்களை கைது செய்த பின்னா்தான் காரணம் தெரியவரும் என்றனா்.

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க