செய்திகள் :

ஹிந்தி திணிப்பை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் சவால்

post image

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஹிந்தி திணிப்பை மையப்படுத்த தயாரா என்று பாஜகவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ‘ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்’ என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் எழுதி வருகிறார்.

இதையும் படிக்க : வெப்பநிலை அதிகரிப்பு: களப் பணியாளா்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தல்

ஹிந்தி திணிப்புக்கு எதிராக வெள்ளிக்கிழமை முதல்வர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”மரம் அமைதியை விரும்பலாம், ஆனால் காற்று ஒருபோதும் அடங்காது’. மக்கள் பணிகளை செய்துகொண்டிருந்த எங்களை, இந்தத் தொடரை எழுதத் தூண்டியது மத்திய கல்வி அமைச்சர்தான். அவர் தனது பொறுப்பை மறந்து, ஒரு மாநிலத்தையே ஹிந்தி திணிப்பை ஏற்கும்படி மிரட்டத்துணிந்தார். தற்போது அவரால் வெல்ல முடியாத ஒரு போராட்டத்தை மீண்டும் தொடங்கவுள்ள விளைவுகளை எதிர்கொள்கிறார்.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள முரண்பாடு என்னவென்றால், அதனை நிராகரிக்கும் தமிழ்நாடு ஏற்கெனவே, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல இலக்குகளை அடைந்துவிட்டது. ஆனால், இந்த கொள்கை 2030-க்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. முனைவர் பட்டம் முடித்தவருக்கு எல்கேஜி மாணவர் விரிவுரை வழங்குவது போல் உள்ளது. திராவிடம் தில்லியில் இருந்து உத்தரவுகளை எடுப்பதில்லை, மாறாக நாடு பின்பற்ற வேண்டிய பாதையை அமைக்கிறது.

தற்போது மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து பிரச்சாரம் தமிழ்நாட்டில் ஒரு நகைப்புக்குரிய சர்க்கஸ் போன்று மாறிவிட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹிந்தி திணிப்பை மையமாக வைத்து பிரசாரத்தில் ஈடுபட சவால் விடுகிறேன்.

வரலாறு தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டின் மீது ஹிந்தி மொழியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் அல்லது தங்கள் நிலைப்பாட்டை மாற்றி திமுகவுடன் இணைந்துள்ளனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு பதிலாக ஹிந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு பொறுத்துக்கொள்ளாது.

திட்டங்களின் பெயர்கள் முதல் மத்திய அரசு நிறுவனங்களுக்கான விருதுகள் வரை, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்தி பேசாதவர்களை மூச்சுத் திணறடிக்கும் அளவுக்கு ஹிந்தி திணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்தி ஆதிக்கத்தை தகர்க்க முன்னணிப் படையாக நின்றது திமுகதான் என்பதை வரலாறு நினைவில் வைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநா் ஆா்.என்.ரவி பிகாா் பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை சொந்த மாநிலமான பிகாா் சென்றாா். ஆளுநா் ஆா்.என்.ரவி தனது சொந்த வேலை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானத்தில் சனிக்கிழமை நண்பகல் பிகாா் மாநிலம் பாட்னா சென்றடை... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் திமுக கண்டன பொதுக் கூட்டம்: திருவள்ளூரில் முதல்வா் பங்கேற்கிறாா்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் விடுதலை தீா்ப்பை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு

போக்ஸோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி-க்கு மாநில தலைமை குற்றவிய... மேலும் பார்க்க

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த சுரேஷ் உயா... மேலும் பார்க்க

முதல்வா் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி, சூலூா்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க