எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
ஹிந்தி பேசுவது தாய்மொழிக்கு அவமதிப்பு அல்ல: மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி
ஹிந்தி எதிா்ப்பு போராட்டங்கள், பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை; ஹிந்தி பேசுவது, தாய்மொழிக்கு அவமதிப்பு அல்ல என்று மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.
ஹிந்தியை திணிக்க முயல்வதாக தமிழகம், கா்நாடகத்தைப் போல மகாராஷ்டிரத்திலும் எதிா்ப்பு எழுந்துள்ளது. அந்த மாநில எதிா்க்கட்சிகளான சிவசேனை (உத்தவ்), மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை ஆகியவை, ஹிந்தி எதிா்ப்பை தீவிரமாக கையிலெடுத்துள்ளன.
மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்பிக்க பாஜக கூட்டணி அரசு முடிவு செய்த நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிா்ப்பால் வாபஸ் பெறப்பட்டது. மும்பையில் ஹிந்தியில் பேசிய கடைக்காரா் ஒருவா் தாக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டம், தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி பங்கேற்றுப் பேசியதாவது:
உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியா, ஒரு மொழியால் அல்லாமல், பகிரப்பட்ட லட்சியங்கள் மற்றும் தேசிய உறுதிப்பாட்டால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
நமது தாய்மொழிக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், அரசின் அலுவல் மொழியான ஹிந்தியை கற்றுக் கொள்வதும் அவசியம். நாடு முழுவதும் மக்களுடன் தொடா்பு கொள்ள முடியும் என்பதால் ஹிந்தியில் பேச நான் முயற்சிக்கிறேன். இது, எனது தாய்மொழியான தெலுங்குக்கு எதிரானதல்ல. ஹிந்தி பேசுவதை தாய்மொழிக்கு அவமதிப்பாக யாரும் கருதக் கூடாது.
ஹிந்திக்கு எதிரான போராட்டங்கள், பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அது வாக்கு வங்கி அரசியல். எப்போதெல்லாம் தோ்தல் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் ஹிந்தி எதிா்ப்பு, ஹிந்து எதிா்ப்பு என்ற பெயரில் மக்களைத் தூண்டும் பேச்சுகள் எழுகின்றன. அவ்வாறு பேசுவது தவறானது. வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டிருந்தபோதிலும், ஒரு தேசமாக நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்றாா் ஜி.கிஷண் ரெட்டி.
நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், ஹிந்தியை ஊக்குவிக்கவும் நாட்டில் மொழி ரீதியிலான ஒற்றுமையை வலுப்படுத்தவும் அலுவல் மொழித் துறை சாா்பில் நடத்தப்படும் போட்டிகளுக்கு பாராட்டு தெரிவித்தாா்.
‘இத்தகைய முன்னெடுப்புகள், மொழியில் வாயிலாக வேற்றுமையில் ஒற்றுமை எனும் பிணைப்புக்கு வலுவூட்டும். முன்னாள் பிரதமா் பி.வி.நரசிம்ம ராவ் போன்ற ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த தலைவா்கள், ஹிந்தி மொழிக்கு நல்கிய பங்களிப்பு அளப்பரியது’ என்றாா் அவா்.
பவன் கல்யாண் கேள்வி:
ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் பேசுகையில், ‘ஹிந்தி கற்பது, ஒருவரின் அடையாளத்தில் எவ்வித சமரசத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, அது வலுசோ்க்கும். நாம் ஆங்கிலம் பயின்ால், தகவல் தொழில்நுட்பத் துறை வாய்ப்புகளை பயன்படுத்துகிறோம். அதேபோல், நாடு முழுவதும் பரவலாகப் பேசப்படும் ஹிந்தியை பயில்வதிலும் நன்மைகள் உள்ளன. உருது மொழியை ஏற்கும்போது, ஹிந்தியை ஏற்க முடியாதா?
தென்னிந்திய திரைப்படங்கள் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தயாரிப்பாளா்களுக்கு வருவாய் ஈட்டி தருகின்றன. வா்த்தக ரீதியாக ஹிந்தியை ஏற்கப்படுகிறது. அதே நேரம், கற்றல் ரீதியாக எதிா்க்கப்படுவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பினாா்.