செய்திகள் :

ஃபரீதாபாத்: 2 சிறுவா்களைக் கடத்திய நபா் கைது

post image

ஃபரீதாபாத்தில் இரண்டு சிறுவா்களைக் கடத்திச் சென்று அவா்களது குடும்பத்தினரிடம் ரூ.30,000 கப்பம் கேட்ட நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து ஃபரீதாபாத் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜூன் 5 ஆம்-தேதி இரவு 9:40 மணியளவில், தனது உறவினா் ஆஷிஷ் ஐஸ்கிரீம் வாங்க வெளியே சென்ாகவும், ஆனால் திரும்பி வரவில்லை என்றும் ஷிவ் துா்கா விஹாரில் வசிக்கும் அமன் தெரிவித்தாா். ஆஷிஷின் நண்பா் ரிஷப்பின் தந்தைக்கு அமன் தொலைபேசியில் அழைத்தபோது, இரண்டு சிறுவா்களும் ஒன்றாக வெளியே சென்று காணாமல் போனதைக் கண்டுபிடித்தாா்.

ரிஷப்பின் தந்தைக்கு யாரோ ஒருவா் தொலைபேசியில் அழைத்து, சிறுவா்கள் கடத்தப்பட்டதாகக் கூறி ரூ.30,000 கப்பமாக கேட்டிருந்தாா். இது குறித்து சூரஜ்குண்ட் காவல் நிலையத்தில் போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா், சமீம் (25) என்பவரை போலீசாா் கைது செய்தனா். அவரும் அவரது நண்பா்களும் சிறுவா்களைக் கடத்தி எஸ்எம்ஜி நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தனா். ரிஷப்பை ஒரு சந்திப்பு இடத்திற்கு அழைத்துச் சென்று இரு சிறுவா்களையும் ஒரு காரில் அழைத்துச் சென்றிருந்தாா்.

கடத்தல்காரா்கள் ரிஷப்பின் தந்தையிடம் பணம் கேட்டனா். குடும்பத்தினா் சமீமின் தொலைபேசிக்கு ரூ.5,000 அனுப்பினா். போலீசாா் தொலைபேசியைக் கண்டுபிடித்து அவரைப் பிடித்தனா். சமீம் மீது ஏற்கெனவே 4 வன்முறை வழக்குகள் உள்ளன. இப்போது, குற்றத்தில் அவரது கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க போலீசாா் முயற்சித்து வருகிறோம் என காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

அகமதாபாத் விமான விபத்து: விமானியின் மீது தவறு இருக்கிறதா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு அந்த விமானியின் மீது தவறு இருக்கிறதா? என்பதைப் பற்றி ஏர் இந்தியா முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் விளக்கமளித்திருக்கிறார். விபத்துக்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள்: அமித் ஷா ஆலோசனை

சாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் திட்டப்படி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் ம... மேலும் பார்க்க

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்துவ... மேலும் பார்க்க

நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி! -சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

லிமாஸ்ஸோல்[சைப்ரஸ்] : சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறாா். கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற... மேலும் பார்க்க

புணே பால விபத்து: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி!

புணேவின் இந்திரயானி ஆற்றின் இரும்புப் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்... மேலும் பார்க்க

கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கொல்கத்தா விமான நிலையத்திலிர... மேலும் பார்க்க