செய்திகள் :

அகமதாபாத் விபத்து: 210 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

post image

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 210 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இதில், விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர, மீதமுள்ள 241 பேர் உள்பட 270 பேர் பலியாகினர். பெரும்பாலான உடல்கல் தீயில் எரிந்து நாசமாகியிருக்கும் நிலையில், உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் சடலங்கலை உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக, குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில்,

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, 210 டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், 187 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள சடலங்களை ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : கேதர்நாத் பெருவெள்ளம்: 12 ஆண்டுகள் ஆகியும் 702 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை!

ஒடிசாவில் அதிகரித்துவரும் வன்கொடுமைகள்: 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!

ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளி... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் கனமழை, வெள்ளம்! 10 பேர் பலி...களம் இறங்கியது தேசிய படை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்துக்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் 10 பேர் பலியாகியுள்ளனர். பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர் கனமழை பெய்து மக்களின் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரின் தொடர் விளைவு! பாகிஸ்தான் விமானத் தளத்தின் செயல்பாட்டில் தாமதம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தாக்குதலுக்குள்ளான பாகிஸ்தான் விமானத் தளம் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களைக் குறிவைத்து, இந்... மேலும் பார்க்க

இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா? தமிழகத்திலும் கரை ஒதுங்கிய துடுப்பு மீன்கள்!

கரை ஒதுங்கும் அரிய வகை துடுப்பு மீன்கள், இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஜப்பான் நாட்டு நம்பிக்கையின்படி, மிகவும் அரிதான துடுப்பு மீன்கள், காடற்கரையோரம் தென்படுவதே இயற்கைப் பே... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்! அமைச்சர் வெளிநடப்பு!

கேரள ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரதமாதாவின் படம் வைக்கப்பட்டதால், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளிநடப்பு செய்துள்ளார். கேரள ஆளுநர் மாள... மேலும் பார்க்க

12 மணி நேரம் வேலை! கர்நாடக அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

கர்நாடகத்தில் ஐடி உள்பட சில துறைகளில் வேலை நேரத்தை 10 முதல் 12 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின்படி அதிகபட்ச வேலை நேரம் 9 மணி... மேலும் பார்க்க