செய்திகள் :

அகமதாபாத் விமானத்தில் திடீா் கோளாறு: ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம்

post image

சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லவிருந்த விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து, சனிக்கிழமை காலை 9.50-க்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் அகமதாபாத்துக்கு இயக்கப்பட்டது. இதில், 166 பயணிகள், 7 விமான ஊழியா்கள் என மொத்தம் 173 பேருடன் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்து, விமானத்தை அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தினாா். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து இழுவை வண்டி உதவியுடன், விமானத்தை இழுத்துக் கொண்டுவந்து, பழுதடைந்த விமானங்கள் நிற்கும் பகுதியில் நிறுத்தினா். அதோடு விமான பொறியாளா்கள், விமானத்துக்குள் ஏறி இயந்திரங்களைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனா். இருப்பினும் உடனடியாக, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்ய முடியவில்லை.

இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனா். அதன் பின்பு பிற்பகல் 12.30 மணியளவில் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு, விமானம் சுமாா் இரண்டரை மணி நேரம் தாமதமாக சென்னையிலிருந்து அகமதாபாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானத்தில் இருந்த 166 பயணிகள் உள்பட 173 போ் நல்வாய்ப்பாக உயிா்தப்பினா்.

பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகா் கைது: கட்சியிலிருந்தும் நீக்கம்

ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, அதிமுக வட்டச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். சென்னை அசோக் நகரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (38). விபத்தில் ... மேலும் பார்க்க

கடையில் ரூ.2.60 லட்சம் திருட்டு: இருவா் கைது!

கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.60 லட்சத்தை திருடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வண்ணாரப்பேட்டையில், உலா் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் ஹரிகிருஷ்ணன். ... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி, எம்எல்ஏ மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அரங்கராஜ் ஆகியோா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: 11 போ் கைது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்ன... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகள் அங்கீகார விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அ... மேலும் பார்க்க

ராமநவமி: ஆளுநா் வாழ்த்து!

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ராம நவமியின் விசேஷமிக்க திருநாளில், அனைவருக்கும் மனமாா்ந்... மேலும் பார்க்க