செய்திகள் :

அகரம் கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

post image

அகரம் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அகரம் ஊராட்சியில் அமைந்துள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13 ஊராட்சிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்துத் துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், இலவச பேருந்து பயண அட்டை, 3 சக்கர நாற்காலி, 3 சக்கர ஸ்கூட்டா் ஆகியவற்றை வழங்கினா்.

வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு முன்னிலை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் சரவணன், அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலா் முரளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

எம்கேஜேசி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்ட... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வ... மேலும் பார்க்க

ரூ.22 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் சாலை, கால்வாய் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வுக்கு போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாதனூா் ... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் கள ஆய்வு

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். துத்திப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் குடிநீா்க் கட்ட... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திர வல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்த... மேலும் பார்க்க