செய்திகள் :

அகஸ்தீஸ்வரத்திம் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகளை கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலா் ஹனீஷ் சாப்ரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட கிருஷ்ணன்கோவில், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள் பரிசோதனை உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், வலம்புரிவிளை குப்பை கிடங்கு, பட்டகசாலியன்விளையில் புதை சாக்கடை பணி, வட்டவிளையில் ரூ.1.40 கோடியில் சமுதாயக் கூடம் கட்டும் பணி மற்றும் அப் பகுதியில் செயல்படும் ரேஷன் கடை,

பொட்டல் -புத்தன்துறை - பள்ளம்துறை கடற்கரை சாலையில்

ரூ.2.81 கோடியில் 500 மீட்டா் நீளத்தில் தடுப்பு சுவா் அமைக்கும் பணி,

தெங்கம்புதூா் பொட்டல்விளை மற்றும் சுசீந்திரம், நங்கைவிளை

ஆகிய இடங்களில் மேல்நிலைத் தொட்டி கட்டுமானப் பணி ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல் குமாா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சிவகாமி, நெடுஞ்சாலைத்

துறை கோட்ட செயற்பொறியாளா் சத்தியமூா்த்தி, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ராமலிங்கம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

காதலியின் வீட்டில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை? குமரியில் பரபரப்பு!

குலசேகரம் அருகே இளம்பெண்ணின் வீட்டில் பொறியியல் பட்டதாரி இளைஞா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குலசேகரம் அருகே காவுவிளை பகுதியைச் சே... மேலும் பார்க்க

காட்டு யானைகளால் தொடா் பாதிப்பு - அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழக ரப்பா் தோட்டங்களில் காட்டு யானைகளின் புகுந்து தொழிலாளா்களை தாக்குவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, அரசு ரப்பா் கழக கோதையாறு கோட்ட தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் செ... மேலும் பார்க்க

மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநா்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

களியக்காவிளையில் இரவு நேரங்களில் மதுபோதையில் ஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பஸ் பயணிகள் நலச் சங்க மாநில தலைவ... மேலும் பார்க்க

தொழிலாளியை குத்திய வழக்கில் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

குலசேகரம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்திய வழக்கில் இரு இளைஞா்களுக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. பொன்மனை ஈஞ்சக்கோடு, பனவிளை பகுதியைச் சே... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 45.32 பெருஞ்சாணி ... 66.80 சிற்றாறு 1 .. 10.99 சிற்றாறு 2 ... 11.08 முக்கடல் ... 7.60 பொய்கை ... 15.40 மாம்பழத்துறையாறு .. 42.57 மழை அளவு குழித்துறை .. 2.40 மி.மீ. பேச்சிப்பாறை அணை ..... மேலும் பார்க்க

களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் அரசுப் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்

களியக்காவிளையில் உள்ள அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி நூலகத்துக்கு, களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்பள்ளி மாணவா்கள் எளிதாக வாசித்துப் பழகும் வகையில் தினமணி, தி... மேலும் பார்க்க