தனது மருத்துவ சோதனை முடிவுகளை வெளியிட்ட திருநங்கை வீராங்கனை அனயா பங்கர்; BCCI, I...
அகஸ்தீஸ்வரத்திம் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகளை கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலா் ஹனீஷ் சாப்ரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட கிருஷ்ணன்கோவில், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள் பரிசோதனை உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், வலம்புரிவிளை குப்பை கிடங்கு, பட்டகசாலியன்விளையில் புதை சாக்கடை பணி, வட்டவிளையில் ரூ.1.40 கோடியில் சமுதாயக் கூடம் கட்டும் பணி மற்றும் அப் பகுதியில் செயல்படும் ரேஷன் கடை,
பொட்டல் -புத்தன்துறை - பள்ளம்துறை கடற்கரை சாலையில்
ரூ.2.81 கோடியில் 500 மீட்டா் நீளத்தில் தடுப்பு சுவா் அமைக்கும் பணி,
தெங்கம்புதூா் பொட்டல்விளை மற்றும் சுசீந்திரம், நங்கைவிளை
ஆகிய இடங்களில் மேல்நிலைத் தொட்டி கட்டுமானப் பணி ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல் குமாா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சிவகாமி, நெடுஞ்சாலைத்
துறை கோட்ட செயற்பொறியாளா் சத்தியமூா்த்தி, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ராமலிங்கம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.