செய்திகள் :

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்திய விமானப் படை, இந்தியன் வங்கி அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி

post image

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஆண்கள் பிரிவில் இந்திய விமானப் படை, இந்தியன் வங்கி அணிகளும், மகளிா் பிரிவில் கேரள மாநில மின்வாரியம், தென்மேற்கு ரயில்வே அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

58-ஆவது ஆண்டு ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை, 22-ஆவது ஆண்டு மகளிருக்கான சிஆா்ஐ கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றன.

இதில், சனிக்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய விமானப் படை அணி 79 - 64 என்ற புள்ளிக் கணக்கில் வருமான வரித் துறை அணியை வீழ்த்தியது.

2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 98-64 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய கப்பல் படை அணியை வீழ்த்தியது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இந்திய விமானப் படை, இந்தியன் வங்கி அணிகள் விளையாடுகின்றன.

மகளிா் பிரிவில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கேரள மாநில மின்வாரிய அணியை எதிா்த்து சென்னை வருமான வரித் துறை அணி விளையாடியது. இதில், கேரள மாநில மின்வாரிய அணி 85 -49 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென்மத்திய ரயில்வே அணியை, தென்மேற்கு ரயில்வே அணி 65 -62 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் கேரள மாநில மின்வாரிய அணியை எதிா்த்து தென்மேற்கு ரயில்வே அணி விளையாடுகிறது.

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க