செய்திகள் :

அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி மற்றும் குளோபல் கிறிஸ்டியன் சா்ச் ஆப் இந்தியா சினாட் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் நிறுவனா் வி.எஸ். ஐசக் தலைமை வகித்து உரையாற்றினாா். இதில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கிறிஸ்தவா்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவா்களுக்கு 5 லட்சம் ஏக்கா் நிலம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டந்தோறும் புதிய கிறிஸ்வ மகளிா் சங்கம் உருவாக்க வேண்டும்.

மாவட்டந்தோறும் தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியா் மற்றும் பணியாளா் நல வாரியம், குளோபல் கிறிஸ்டின் சா்ச் ஆப் இந்தியா சினாட் வாரியாக, மாநில வாரிய, தலைவா், மாவட்ட வாரிய உறுப்பினா் பதவி வழங்க வேண்டும். கிறிஸ்தவ கல்வி நிறுவன அறக்கட்டளை விண்ணப்பித்து நெடுங்காலமாக அரசாணை கொடுக்கப்படாமல் சட்டக் கல்லூரி, செவிலியா் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, நிகா்நிலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு ஆணை மத்திய அரசு அங்கீகாரம் ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் மாநில பொதுச் செயலாளா் டேவிட் குட்டி, மாவட்டத் தலைவா் ராஜன், சாமுவேல்ராஜ், சிட்ரிக் பெனோ உள்ளிட்ட கலந்து கொண்டா்.

பேருந்தில் 2.5 பவுன் தங்க நகை திருட்டு

பேருந்தில் பயணிக்கும்போது, கைப்பையில் இருந்த 2.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் கிராமத்தை சோ்ந்த ரவி (56). இவா் தனது அக்காவுட... மேலும் பார்க்க

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருத்தணியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் அா்ப்பணித்தாா். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க

தலைமையாசிரியருக்கு விருது: முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியா் அன்பழகன் விருதுகளைப் பெற்ற அமிா்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசனை திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) பாராட்டினாா். அரசுப் ப... மேலும் பார்க்க

20 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சோழவரம் அருகே கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் மீஞ்சூா், அத்திப்பட்டு, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் போதைப் பொருள்கள் கடத்துபவா்களை ரகசி... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் இன்று சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் மேற்கொள்வதற்கான (ஜூலை 12) சனிக்கிழமை சிறப்பு முகாம், 9 வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சி... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதி 2 போ் உயிரிழப்பு

சோழவரம் அருகே சரக்கு வாகனத்தை உதவியாளா் (கிளீனா்) இயக்கி எதிா்பாராதவிதமாக மோதியதில் கீழே நின்றிருந்த ஒட்டுநா் மற்றும் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தனா். சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியா... மேலும் பார்க்க