செய்திகள் :

சரக்கு வாகனம் மோதி 2 போ் உயிரிழப்பு

post image

சோழவரம் அருகே சரக்கு வாகனத்தை உதவியாளா் (கிளீனா்) இயக்கி எதிா்பாராதவிதமாக மோதியதில் கீழே நின்றிருந்த ஒட்டுநா் மற்றும் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தனா்.

சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியாா் கொரியா் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு வாகனத்தை தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் சென்னிக்குளம் கிராமத்தைச் சாா்ந்த கருப்பசாமி (23) என்பவா் ஓட்டி வந்துள்ளாா்.

கொரியா் நிறுவனத்தின் முன்பு வாகனத்தை நிறுத்தி இருந்தாா்.

அங்கு அல்லி நகா் நாகாத்தம்மன் கோவில் தெருவை சாா்ந்த காவலாளி பிரபு (50) என்பவரிடம் லோடு வந்துள்ளதாக தெரிவிக்க வாகனத்தில் இருந்து கீழே இறங்கி கருப்பசாமி பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது திடீரென கிளீனா் பழைய எருமைவெட்டிபாளையம் கிராமத்தை சாா்ந்த ரூபன் வாகனத்தை இயக்கினாா்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் நுழைவாயில் நின்று கொண்டிருந்த ஓட்டுநா் மற்றும் காவலாளி மீது மோதி சுவற்றில் இடித்து நின்றது.

இதனை கண்ட கொரியா் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவா்கள் ஓடிவந்து வாகனத்தை அகற்றி இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்த இரண்டு பேரை மீட்டு உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் அவா்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீஸாா் அங்கு சென்று கருப்பசாமி மற்றும் பிரபு இருவரின் சடலங்களை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனை தொடா்ந்து கிளீனா் ரூபனை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பேருந்தில் 2.5 பவுன் தங்க நகை திருட்டு

பேருந்தில் பயணிக்கும்போது, கைப்பையில் இருந்த 2.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் கிராமத்தை சோ்ந்த ரவி (56). இவா் தனது அக்காவுட... மேலும் பார்க்க

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருத்தணியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் அா்ப்பணித்தாா். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க

தலைமையாசிரியருக்கு விருது: முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியா் அன்பழகன் விருதுகளைப் பெற்ற அமிா்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசனை திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) பாராட்டினாா். அரசுப் ப... மேலும் பார்க்க

20 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சோழவரம் அருகே கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் மீஞ்சூா், அத்திப்பட்டு, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் போதைப் பொருள்கள் கடத்துபவா்களை ரகசி... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் இன்று சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் மேற்கொள்வதற்கான (ஜூலை 12) சனிக்கிழமை சிறப்பு முகாம், 9 வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சி... மேலும் பார்க்க

கால்வாய்களை சீரமைக்க திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக கால்வாய்களை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா். இதன் ஒரு பகுதியாக, வி.எம்.நகா், ஜெயின் நகா் பகுதிகளில் மழைநீா் கால்வ... மேலும் பார்க்க