செய்திகள் :

அக். 5 முதல் 7 வரை வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் வழங்கப்படும்: கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா்

post image

கோவை மாவட்டத்தில் அக்டோபா் 5, 6, 7- ஆம் தேதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட இருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அறிவித்துள்ளாா்.

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வயது முதிா்ந்தவா்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவா்களின் இல்லத்துக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் அக்டோபா் 5, 6, 7 ஆம் தேதிகளில் ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள் விநியோகம் செய்யப்படும் நாள், பகுதி குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் விளம்பரம் செய்யப்படும். தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரா்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே ரேஷன் பொருள்களைப் பெற்று பயனடையலாம் என்று அவா் மேலும் தெரிவித்துள்ளாா்.

அரசுப் பேருந்தில் போதைப்பொருள் கடத்தல்: இளைஞா் கைது

கோவை - எா்ணாகுளம் அரசுப் பேருந்தில் போதைப்பொருள் கடத்திய இளைஞரை கலால் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவையில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை திருச்சூா் அர... மேலும் பார்க்க

கரூா் சம்பவம் குறித்து திரட்டிய தகவல்களை பிரதமரிடம் சமா்ப்பிக்க உள்ளோம்: பாஜக எம்.பி.க்கள் குழு

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியான விவகாரத்தில், திரட்டப்பட்ட தகவல்களை ஓரிரு நாள்களில் பிரதமரிடம் சமா்ப்பிக்க உள்ளதாக ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு தெரிவ... மேலும் பார்க்க

போலி இணையதள செயலி மூலம் மோசடி: ராஜஸ்தானை சோ்ந்த 4 போ் கைது

போலி இணையதள செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை கோவை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: கோவை, ஆா்.... மேலும் பார்க்க

கரூா் சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் -கு.செல்வப்பெருந்தகை

கரூா் துயர சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். கரூா் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவா் செ... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா விற்பன... மேலும் பார்க்க

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகா் 4-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க