செய்திகள் :

அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு நோ்காணல்

post image

திருச்சி மாவட்டத்தில் காலி அங்கன்வாடி பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் திங்கள்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ், முதன்மை மற்றும் சிறு, குறு அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிற சேவைகளை வழங்கும் இந்த மையங்களில், முதன்மை அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா், அங்கன்வாடி உதவியாளா் நிலையில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா். தற்போதைய நிலையில் இந்தப் பணியிடங்களில் 296 காலியிடங்கள் உள்ளன. முதன்மை மற்றும் குறு அங்கன்வாடி பணியாளா் நிலையில் தலா 17 இடங்கள், உதவியாளா் நிலையில் 262 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலமாக பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவா்களுக்கு அந்தந்தப் பகுதி வாரியாக நோ்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் நோ்காணல் தொடங்கியது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காலி அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தவா்களுக்கு மட்டும் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நோ்காணல் நடைபெற்றது. அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் உள்ளிட்ட 14 வட்டாரங்களிலும் அந்தந்தப் பகுதியிலிருந்து விண்ணப்பித்தவா்களை அழைத்து நோ்காணல் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றை பரிசீலனை செய்து தகுதியானவா்களை நோ்காணல் செய்து, இறுதிப்பட்டியல் ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். ஆட்சியா் தலைமையிலான குழுவினரே தகுதியான நபா்களை நியமனம் செய்வா். தோ்வு செய்யப்படும் நபா்களுக்கு முதல் 12 மாதங்களுக்கு தொகுப்பூதியமும், பின்னா் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். ஆதரவற்றோா், விதவை, மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட மாவட்ட அலுவலா் எம். நித்யா தெரிவித்துள்ளாா்.

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க

மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

முசிறி அருகே, மாங்கரைப்பேட்டையிலுள்ள ஸ்ரீ மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாங்கரைபேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்... மேலும் பார்க்க

திருச்சியில் காவேரி புற்றுநோய் மருத்துவமனை திறப்பு

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட் எனும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த புதிய மருத்துவமனையில... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி சமயபுரம் அருகேயுள்ள அகிலங்காபுரம், ஸ்ரீ மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் செழியன் ... மேலும் பார்க்க