செய்திகள் :

அஜித்குமார் வழக்கு: மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

post image

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் பலியானார். இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணைப் பிரிவு ஐ.ஜி.க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The State Human Rights Commission has voluntarily initiated an investigation into the death case of Thiruppuvanam youth Ajith Kumar.

இதையும் படிக்க: ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: கிருஷ்ணகிரி மாவட்டம... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மீனவா்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி., கோரிக்கை

ஈரானின் கிஷ் தீவுக்கு அருகே சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரியை சோ்ந்த 650-க்கும் மேற்பட்ட இந்திய மீனவா்களை பாதுகாப்பாக மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளா... மேலும் பார்க்க

திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கசிவு, சிகரெட் சூடு!

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மருத்துவப் பரிசோதனை வெளியாகியுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக... மேலும் பார்க்க

பிரசார இயக்கத்தில் காபி-லாம் தராங்களா.? - விடியோ அழைப்பில் முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தில் திருப்பூர் மாவட்டச் செயலர் ஒருவருடன் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பாக பேசிய விடியோ வெளியாகியுள்ளது.திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணிய... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஒரே நாளில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் 13 வயதான ரோகித் ... மேலும் பார்க்க