செய்திகள் :

'அஜித் மரணத்தின் முதல் குற்றவாளி ஸ்டாலின்தான்...' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

post image

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ தனிப்படை போலீசார் ஏன் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். அவர்களை விசாரிக்குமாறு உத்தரவிட்டது யார்? யார் அந்த விஐபி? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வி. திருட்டு வழக்கை விசாரிக்க போலீசாருக்கு உரிமை உள்ளது.

அஜித்குமார் மரணம்
அஜித்குமார் மரணம்

ஆனால் எதற்குத் தாக்கினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது கேள்வி. குற்றம் சாட்டப்பட்ட நபர் வேறு இடத்தில் இருந்தால் தனிப்படை விசாரிக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது தனிப்படை ஏன் விசாரிக்க வேண்டும்.

எஸ்.பி-யை பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டும். மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசிற்கு உள்ளது. அஜித் குமாரை போலீசார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இது உண்மையா? இல்லையா? அவர் மீது மிளகாய்பொடி தூவி கொடூரமாகத் தாக்கி உள்ளனர் உண்மையா? இல்லையா? சாதரணமாக கூலிப்படை ஆட்கள் கூட இந்த மாதிரி கொடூரமானக் கொலையை செய்ய வாய்ப்பில்லை.

அஜித்குமாரின் கொலைக்கு அரசே பொறுப்பு என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அஜித்குமாரின் மரணத்திற்கு முதல் குற்றவாளியாகக் காவல்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்தான் பொறுப்பு.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

ஆகவே அவரின் கையால் ஆகாத அரசு 25 லாக்அப் மரணங்களைத் தொடர்ந்து நடத்தி இருக்கின்ற அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். பதிவு விலக வேண்டும். முதல் குற்றவாளி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு. ஸ்டாலின் வீட்டுக்குச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி

சிவகங்கை மடப்புரத்தில் போலீஸாரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் வழக்கில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியாக மாறியிருக்கிறார். அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் சம்பவத்தை சக்தீஸ்வரன் வீடியோ எட... மேலும் பார்க்க

பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க

"டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருந்தவர் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார்.திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

மிஸ்டர் கழுகு: சீனியரை மாற்ற விரும்பாத தலைமை.. டு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய அண்ணன்!

ஆட்டம் காட்டும் மேலிட உறவுப்புள்ளி!சீனியரை மாற்ற விரும்பாத தலைமை...சூரியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சீனியரை மாற்றும் எண்ணத்தில் முதன்மையானவர் இல்லையாம். ஆனாலும், ‘அவர் மாற்றப்பட உள்ளார... மேலும் பார்க்க

TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imperfect Show 2.7.2025

* தலைமைச் செயலக அதிகாரி கொடுத்த அழுத்தம் தான் தனிப்படை விசாரிக்கக் காரணமா?* காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* "SORRY தான் ப... மேலும் பார்க்க

`Ajithkumar lockup death-ல நிகிதா பின்னால் இருப்பது யார்?' Piyus Manush அட்டாக்!

அதிரவைத்த சிவகங்கை சம்பவம். அஜித் குமாருக்கு நடந்த சித்ரவதைகள். இதில் கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல அவர்களோடு பின்னணியில் இருக்கும் உயர் அதிகாரிகளும், குறிப்பாக நிகிதா-வின... மேலும் பார்க்க