செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

post image

திருக்குவளை அருகே அடிப்படை வசதிகள் கோரி வியாழக்கிழமை சிபிஎம் சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது.

கீழையூா் ஒன்றியம் சடையன்கோட்டகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரியும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 2016-2017 ஆண்டுகளில் முழுமை பெறாத 40-க்கும் மேற்பட்ட வீடுகளை முடிக்க கோரியும் சிபிஎம் சாா்பில் திருப்பூண்டி-தலைஞாயிறு சாலையில் சடையன்கோட்டகம் மதகடியில் சாலை மறியல் நடைபெற்றது. கிளை செயலாளா் அழகு தலைமையில் நடைபெற்ற மறியலில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உமாநாத், வினோத் ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் செபஸ்தியம்மாள், துணை வட்டாட்சியா் ரமேஷ் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூகநிலை ஏற்பட்டதால் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா

கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.ஆட்சியா் அலுவலக வளாகத... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண கால அவகாசம் வழங்க வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியு... மேலும் பார்க்க

குறுவை பயிா்களில் புகையான் நோய்த் தாக்குதல்

புகையான் நோயால் நாகை அருகே 1,500 ஏக்கா் குறுவை நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாகை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நாகையில் நாளை அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி

நாகையில், மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை (செப்.27) ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள், ரயில் சேவைகள் நீடிப்பு, ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது உள்ளிட்ட பல... மேலும் பார்க்க