செய்திகள் :

``அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு..'' -திமுக எம்எல்ஏ விமர்சனம்; கே.என்.நேருவின் பதில்

post image

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

palaniyandi

அப்போது பேசிய, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, "திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கண்ணுடையான்பட்டி சமுத்திரபாலம் கட்டுவதற்கு வந்த திட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு தாரைவார்க்கப்பட்டது.

இதனால், எங்கள் அமைச்சர் கே.என்.நேரு மீது அளவிட முடியாத வருத்தம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிக்கு என்ன வருகிறதோ அதை செய்யுங்கள். அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். இந்தப் பாலம் வேறு தொகுதிக்குச் சென்றதால் ஸ்ரீரங்கம் தொகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என ஆவேசமாக பேசி, பரபரப்பை பற்ற வைத்தார்.

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக தி.மு.க எம்.எல்.ஏ வெளிப்படையாக குற்றசாட்டை முன்வைத்த நிலையில், அதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் வழங்கியிருக்கிறார்.

திருச்சி கிராப்பட்டியில் மாநகராட்சி பகுதி பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் விழா அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பழனியாண்டியின் குற்றசாட்டு குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது,

kn nehru

"அவர் கூறுவதில் உண்மை இல்லை. அவர் சொல்வது போல திட்டங்களை மாற்ற முடியாது" என்றார்.

ஆளும் தி.மு.க அரசில் அமைச்சராக இருக்கும் கே.என்.நேருவுக்கு எதிராக தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் வெளிப்படையாக குற்றசாட்டை முன்வைத்த சம்பவம், திருச்சி தி.மு.க வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

Israel Vs Iran: ``Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்"- ஈரான்

கடந்த சில நாள்களாக, 'ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு' என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில் ஜூன் 12 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இர... மேலும் பார்க்க

``வரும் தேர்தலில் திருச்சியில் போட்டி; நடிகர் விஜய் மனசு..'' - திருநாவுக்கரசர் தடாலடி

ராகுல் காந்தி பிறந்த நாள்: வேலைவாய்ப்பு முகாம்நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி-யின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகமான அருணாச... மேலும் பார்க்க

`திருமாவளவன் பேரணியில் ஹெலிகாப்டரில் பூ தூவ அனுமதி மறுப்பு' - காவல்துறை சொன்ன காரணம்

திருச்சி மாநகரில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, 'மதசார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.டி.வி.எஸ் டோல்கேட் பக... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிய ECG டெஸ்ட் மட்டுமே போதுமா?

Doctor Vikatan: ஒருவரின் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய இசிஜி டெஸ்ட் மட்டுமே போதுமானதா, ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதை அதில் கண்டறிய முடியுமா, ஆஞ்சியோகிராம் பரிசோதனை யாருக்குத்தேவைப... மேலும் பார்க்க

தெருவோர மருந்தகங்கள்.. நாம் மறந்த மருத்துவச்செடிகளின் பலன்கள்!

மருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில், நம் முன்னோர்கள் பல வகையான நோய்களை மூலிகைகளை வைத்தே குணப்படுத்திக் கொண்டனர். அந்தச் செடிகள் எல்லாம் சாதாரணமாக நம் வீட்டு கொல்லைப்புறங்களிலும், தெருவோரங்களிலுமே இர... மேலும் பார்க்க

திருச்சி: ``ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது.." - தொல்.திருமாவளவன்

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"ஜூன் 14-ம் தேதியான நாளை மாலை 4 மணி அளவில் அண... மேலும் பார்க்க