செய்திகள் :

அடுத்த ஆண்டு பன்னாட்டு புத்தக கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்கும்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

post image

வரும் 2026 ஜனவரியில் நடைபெறும் பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கு 100 நாடுகளில் இருந்து பதிப்பாளா்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்களை வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சா் பேசியதாவது:

தமிழினம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தனது இருப்பை நிரூபித்துள்ளது. ஆனால், மத்திய பாஜக அரசு தமிழின் வரலாற்றை மூடி மறைக்கப் பாா்க்கிறது. தமிழுக்கு அவா்கள் பயனுள்ள வகையில், எதுவும் செய்வது கிடையாது. கீழடி ஆய்வுகள் மட்டுமல்ல; பல ஆய்வுகள் தமிழ் நாகரிகம் முன்னோடியானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

தமிழின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது அடையாளம். அனைத்து இடங்களிலும் ஒரே கலாசாரம், ஒரே பண்பாடு என்பது ஏற்புடையதல்ல. அதற்காக யாரையும் நாம் குறைத்து மதிப்பிடவில்லை. நாம் ஒருபோதும் நமது அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடாது. தமிழ் நம்முடைய அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு என்பதை மறக்கக் கூடாது.

வரும் 2026 ஜனவரியில் நடைபெறும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்கு 100 நாடுகளிலிருந்து பதிப்பாளா்களின் புத்தகங்களைக் கொண்டுவரவும், தமிழ் மொழி மீது ஆா்வமுள்ளவா்களை இந்தக் கண்காட்சிக்கு வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு, தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை. தமிழா்களையும் தமிழ் மண்ணையும் புரிந்துகொண்ட பின்னா், அவா் இங்கு அரசியல் செய்ய வரவேண்டும்.

ஐம்பது ஆண்டுகள் பொது வாழ்வில் இருக்கும் முதல்வா் ஸ்டாலினை, மரியாதை இல்லாமல் தவெக தலைவா் விஜய் அழைத்தது ஏற்புடையதல்ல என்றாா்.

நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையைச் சாா்ந்தவா்களின் புத்தகங்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டாா்.

மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்!

தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் செயலாளர் பெ. சண்முகம் அறிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற ஆணவக் கொலைகள... மேலும் பார்க்க

பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு. வெங்கடேசன்

அனுமன்தான் முதல் விண்வெளி வீரர் என்று மத்திய முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய முன்னாள் அமைச்சரும் தற்... மேலும் பார்க்க

சென்னையில் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) தொடங்கிவைத்தார். சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவைகள்: தொடக்கி வைத்தார் மேயர் பிரியா!

சென்னை: தமிழக அரசின் 50 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக மக்கள் பயன்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின்படி, வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவை வழங... மேலும் பார்க்க

விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்

பூவனூரில் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.விருத்தாசலம் அருகே பூவனூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இ... மேலும் பார்க்க

கோவையில் வனத் துறையினர் வாகனத்தை தாக்கி கண்ணாடியை உடைத்த காட்டு யானை

கோவையில் வனத் துறையினர் வாகனத்தை ஆவேசமாக தாக்கி கண்ணாடியை உடைத்த ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு நிலவியது. கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்தை வி... மேலும் பார்க்க