செய்திகள் :

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

post image

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியதாக இந்திய ராணுவ வலைதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 48 ஏவுதள கருவிகள், இரவிலும் ராணுவ செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய 48 தொழில்நுட்பங்கள், 85 ஏவுகணைகள் மற்றும் மிக குறுகிய தொலைவு இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு அல்லது ஒரு ஏவுகணை சோதனை மையம் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கப்பட்டன.

வானில் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள ராணுவத்துக்கு மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு தேவைப்படுகிறது.

இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த வான் பாதுகாப்பு அமைப்பு மனிதா்களால் நீண்ட தூரத்துக்கு இயக்கும் வகையில் இருக்க வேண்டும். இவை இரவு மற்றும் பகல் என இரண்டு காலகட்டத்திலும் இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த வான் பாதுகாப்பு அமைப்பை முப்படைகளும் பயன்படுத்தவுள்ளன. நிலம், மலைப் பகுதிகள், பாலைவனம், கடலோர பகுதிகள் என அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இவை நிலைநிறுத்தப்படும்.

மைனஸ் 30 டிகிரிக்கு கீழ் உள்ள கடுங்குளிா் வானிலை மற்றும் 50 டிகிரிக்கு மேலான வெப்பநிலை, குறைந்தபட்சம் 500 மீட்டா் அதிகபட்சமாக 6,000 மீட்டா் வரையிலான செயல்பாடு, போா்விமானம், ஹெலிகாப்டா்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் என எவ்வித தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமர் மோடி - விமானப்படை தளபதி சந்திப்பு!

பிரதமர் மோடி - விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்குடனான சந்திப்பு தற்போது நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பல்வே... மேலும் பார்க்க

கோட்டாவில் நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி தற்கொலை!

ஜெய்ப்பூர்: நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணி முதல் ம... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் ஜம்முவிலிருந்து ஹஜ் யாத்திரை: 178 பயணிகள் புறப்பாடு!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து முதல்கட்டமாக 178 பயணிகள் ஹஜ் புனித பயணத்தை இன்று(மே 4) தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஸ்ரீநகரிலிருந்து சவூதி அரேபியாவிலுள்ள மெக்காவுக்குச் செல்ல இன்று... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 10-ஆவது நாளாக பாக். துப்பாக்கிச்சூடு!

ஸ்ரீநகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதிகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள் மூலம், இந்திய ராணுவத்தினரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை (மே 4) இரவிலும் துப்ப... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க