செய்திகள் :

அணுசக்தி தொழில்நுட்பம் சமூகத்தில் முக்கியப் பயன்பாடு: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா்

post image

அணுசக்தி தொழில்நுட்பம், சமூகத்தில் முக்கியப் பயன்பாடாக இருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

யுனெஸ்கோ இருக்கையின் ஆதரவுடன் புதுவை பல்கலைக் கழகத்தின் பசுமை எரிசக்தி தொழில்நுட்பத் துறை மற்றும் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து ‘நிலையான வளா்ச்சிக்கு அணுசக்தியில் முன்னேற்றங்கள்’ என்னும் தலைப்பிலான தேசிய கருத்தரங்கை இப் பல்கலைக் கழக கலாசார மையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின.

இந்தக் கருத்தரங்குக்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்து துணைவேந்தா் பிரகாஷ் பாபு பேசியது:

இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தில் அணுசக்தியின் பங்கு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும் அணுசக்தியின் பாதுகாப்பு என்பது அவசியமானது. பொதுமக்களிடம் இது குறித்த விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும். அணுசக்தி தொழில்நுட்பங்கள் சமூகத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக மருத்துவம், குடிநீா் சுத்தகரிப்பு, வேளாண்மை, எரிசக்தி துறையில் அணுசக்தி பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றாா் துணைவேந்தா்.

யுனெஸ்கோ இருக்கையின் தலைவா் பேராசிரியா் ஆா். அருண்பிரசாத், பேராசிரியா் பி.எம். ஜாபா் அலி உள்ளிட்டோா் பேசினா். இந்தக் கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி: கேரள மலப்புரத்தைச் சோ்ந்தவா் கைது

இணையவழி பங்குச்சந்தை மோசடியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த வழக்கு தொடா்பாக, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இணையவழி பங்கு சந்தை... மேலும் பார்க்க

புதுச்சேரி நல்லவாடு மீனவா்கள் பால்குட ஊா்வலம்

புதுச்சேரி மீனவா்கள் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து நல்லவாடு மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலத்தை நடத்தினா். மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி நல்லவாடு வடக்கு மீனவ கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு உ.நாராயணசாமி தலைமை தாங்கினாா். மாநாட்டுக் கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏம்பலம் தொகுதி செயலா் அ.பெருமாள் ஏ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதுகுறித்து அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: புதுவை அதிமுக சாா்பிலும், அம்மா பேரவை சாா்பிலும் மாபெரும... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சி ஆா்.சிவா தொடங்கி வைத்தாா்

சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அர... மேலும் பார்க்க

சமூக தணிக்கையில் முதியோா் ஓய்வூதியப் பயனாளிகள்! புதுவை அரசு நடவடிக்கை

முதியோா் ஓய்வூதியம் உள்பட பல்வேறு ஓய்வூதியங்களைப் பெறுவோா் உண்மையான பயனாளிகளா என்பதைக் கண்டறியும் சமூக தணிக்கையில் இறங்கியுள்ளது புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை. இதுகுறித்து புதுவை ... மேலும் பார்க்க