செய்திகள் :

அதானியின் ஊழலை மூடி மறைக்கும் பிரதமர் மோடி: ராகுல் காந்தி

post image

தொழிலதிபர் அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி மூடி மறைப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த மோடி அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக உறவு, வரி விதிப்பு குறித்து விவாதித்தார்.

இதனைத் தொடர்ந்து, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, “இந்தியா ஜனநாயக நாடு. நாங்கள் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகப் பார்க்கிறோம். அனைத்து இந்தியர்களும் என்னுடையவர் என நான் நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிக்க | இந்தியாவுக்கு நிகரான அதிக வரியை அமெரிக்காவும் விதிக்கும்! டிரம்ப் எச்சரிக்கை

தொழிலதிபர் அதானியின் ஊழல் விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு, “இரு நாடுகளைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற தனிப்பட்ட விவகாரங்களைப் பேசுவதில்லை” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராகுல் காந்தி விமர்சனம்

அவரின் இந்த பதிலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தளப் பதிவில், “உள்நாட்டில் கேள்வி கேட்டால் அமைதியாகிவிடுவார். வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது தனிப்பட்ட விஷயமாகிவிடும். அமெரிக்காவில் கூட பிரதமர் மோடி அதானியின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கிறார்.

பிரதமர் மோடிக்கு நண்பரின் பாக்கெட்டை நிரப்புவது ‘தேசத்தை கட்டியெழுப்புவது என்றால், ஊழல் செய்வதும் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதும் தனிப்பட்ட விஷயமாகிவிடுகிறது” என்று விமர்சித்துள்ளார்.

வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வழிபாடு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் திரிகுடா மலைகளில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி பல்கலைக்கழகத்தின் 1... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட செய்யறிவால் மிகச் சிறப்பான எதிர்காலம் உருவாகும்: குடியரசுத் தலைவர்

மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் துறைகளில் சிறப்பான எதிர்காலம் உருவாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். மெஸ்ராவில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவ... மேலும் பார்க்க

வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை: ராகுல்

இந்தியாவில் திறமை இருந்தாலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க புதிய தொழில்நுட்பத்தில் தொழில்துறை வலிமையை வளர்க்க வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் க... மேலும் பார்க்க

அதிகரிக்கும் ஜிபிஎஸ் நோய் தொற்று! கோலாப்பூரில் பலியான பெண்ணுக்கும் பாதிப்பா!

மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் நோய் பாதிப்பு இருவருக்கு கண்டறியப்பட்ட நிலையில், இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207-ஆக அதிகரித்துள்ளது.நேற்று(பிப். 14) வெள்ளிக்கிழமை 2 பேருக்கு ஜிபிஎஸ் நோய்... மேலும் பார்க்க

ஒரே இரவில் அடுத்தடுத்து விபத்துகள்: மகா கும்பமேளா பக்தர்கள் 15 பேர் பலி!

மகா கும்பமேளா தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் அடுத்தடுத்து வெவ்வேறான விபத்துகளில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கு சென்று பக்தர்கள் 10 பேருடன் திரும்பிய சுற்றுல... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் கொண்டு வந்திருக்கும் புதிய கெடுபிடி! பயனர்களே எச்சரிக்கை!!

உங்கள் ஃபாஸ்டேக்-கை ரீசார்ஜ் செய்ய மறந்துவிட்டாலோ அல்லது அதனுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை முறையாகப் பராமரிக்கத் தவறுவதோ, சுங்கச் சாவடிகளில் அபராதங்களை விதிக்க வழிகோலும் வகையில் திருத்தங்கள் மேற்கொ... மேலும் பார்க்க