செய்திகள் :

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

post image

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைப் போக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில், 2023-ல் நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உயிரிழந்த மாணவரின் தந்தை வழக்கை அம்மாநில உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றத்திலும் வழக்கைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமர்வு, தேர்வு காரணமாக ஏற்படும் அழுத்தம், கல்வி நிறுவனங்கள் வழங்கத் தவறும் ஆதரவு ஆகிய காரணங்களாலும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறினர்.

தொடர்ந்து, இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் வரையில், மாணவர் தற்கொலைகளைத் தடுக்க சில வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

  • மாணவர்களின் பெற்றோருக்கான விழிப்புணர்வு மற்றும் மனநலக் கல்வி

  • மாணவர்களிடம் தேர்வு தொடர்பான பயம், அழுத்தம் முதலானவற்றை நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • தேர்வு நேரங்களின்போது, மாணவர்களுக்கு உரிய ஆதரவளிக்கக் கூடிய முறையான பயிற்சிபெற்ற வழிகாட்டிகள் அல்லது ஆலோசகர்கள் நியமித்தல்

  • மாணவர்களுக்கான குறைதீர் முகாம்கள்

  • கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகள், விடுதிகள், பொது இடங்களிலும் தற்கொலைக்கு எதிரான தடுப்பு எண்கள் வைத்தல்

  • கல்வி நிறுவனங்களில், பாதிக்கப்படக்கூடிய அல்லது பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் தொடர்ந்து கண்காணிப்புடன்கூடிய கலந்துரையாடலும் இருத்தல் மற்றும் கலந்துரையாட ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்தல்

  • ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களும் ஆண்டுதோறும் இருமுறையாவது மனநல பயிற்சிக்கு செல்லுதல்

  • தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஒரு தனிக்குழு அமைக்கப்பட வேண்டும்.

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

இதையும் படிக்க:புதைந்தும் உயிருடன் போராட்டம்! இரக்கமில்லா இஸ்ரேல்; கண்ணீருடன் காஸா!

Student suicides: Supreme Court issues comprehensive guidelines for prevention

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு -கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரி... மேலும் பார்க்க

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: மம்தா பானா்ஜி

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை தெரிவித்தாா். சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இந்தியாவைவிட்டு வெளியேற... மேலும் பார்க்க