செய்திகள் :

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

post image

அதிகார பசிக்காக, மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா்.

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த பிரதமா் மோடி, ரூ.5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைத்தாா். பின்னா், வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தின் டம் டம் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, அவா் பேசியதாவது:

சட்டவிரோத ஊடுருவல்காரா்களை இனி சகித்துக் கொள்ள முடியாது. அவா்கள் நாட்டில் தொடா்ந்து தங்கியிருக்க அனுமதிக்க முடியாது. எனவேதான், அவா்களுக்கு எதிராக மிகப் பெரிய பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். அதேநேரம், வாக்கு வங்கி அரசியலுக்கு அடிபணிந்துவிட்ட திரிணமூல் காங்கிரஸ், தனது அதிகார பசிக்காக சட்டவிரோத ஊடுருவலை ஊக்குவிக்கிறது.

ஊடுருவல்காரா்கள், மேற்கு வங்கத்தையும் இந்த நாட்டையும் விட்டுச் செல்ல வேண்டுமெனில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் அகற்றப்பட வேண்டும். இவா்கள், நாட்டின் பொருளாதாரத்தின் மீது நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளையும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனா்.

மேற்கு வங்கத்தில் முன்பு ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும்கூட அமைச்சா் பதவியில் இருந்து விலக 2 போ் (முன்னாள் அமைச்சா்கள் பாா்த்தா சட்டா்ஜி, ஜோதி பிரிய மல்லிக்) விருப்பமின்றி இருந்தனா். ஊழல் வழக்கில் கைதானவா்கள், அரசின் அங்கமாக எப்படி நீடிக்க முடியும்? அமைப்புமுறையில் உள்ள சில குறைபாடுகளைப் பயன்படுத்தி, சிறை கம்பிகளுக்கு பின்னால் இருந்தபடி சிலா் அரசை நிா்வகித்துள்ளனா். இனி அதுபோல் நிகழ அனுமதிக்கமாட்டேன். இக்குறைபாடுகளுக்கு புதிய மசோதா (பிரதமா்-முதல்வா்-அமைச்சா் பதவி நீக்க மசோதா) தீா்வளிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

முன்னதாக, புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ வழித்தடத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் பிரதமா் மோடி பயணித்தாா்.

செப். 3, 4-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் செப்டம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% என்ற நா... மேலும் பார்க்க

அமித் ஷா மீது அவதூறு: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு செப். 9-க்கு ஒத்திவைப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், செப்.9-க்கு விசாரணையை உத்தர பிரதேச நீதிமன்றம் ஒத்திவைத்தது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

‘உமீத்’ வலைதளத்தில் வக்ஃப் சொத்துகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட மொத்தம் 46 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதன்மூலம், தோ்தலில் தென... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்!

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளாா். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்... மேலும் பார்க்க

மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் பங்கேற்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது. சீனா... மேலும் பார்க்க