செய்திகள் :

அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

post image

ஓப்போ நிறுவனத்தில் அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இன்று (ஏப். 21) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனத்தில், கே 13 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன், 7,000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ளது.

கேமராவுக்காக மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஓப்போ நிறுவனத்தில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது.

இதன் விலை என்ன? சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஓப்போ கே 13 5ஜி திரையின் சிறப்புகள்

ஓப்போ கே 13 5ஜி ஸ்மார்ட்போனானது 6.67 அங்குல அமோலிட் திரை கொண்டது. பயன்படுத்துவதற்கு மிகவும் சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்டது. 1,200 nits வெளிச்சத்தை உமிழும் வகையில் பிரகாசமுடையது. திரை முழுவதும் எச்டி அம்சமுடையது.

கேமராவின் சிறப்புகள்

ஓப்போ கே 13 5ஜி ஸ்மார்ட்போனானது பின்புறம் 50MP அல்ட்ரா கிளியர் லென்ஸ் உடனான கேமரா கொண்டது. 2MP கூடுதல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறந்த செல்ஃபி படங்களுக்காக 16MP முன்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செய்யறிவு தொழில்நுட்பத்தில் புகைப்படங்களில் உள்ள தேவையற்ற ஒலி, மங்களான தன்மை போன்றவற்றை நீக்கிக்கொள்ளும் சிறப்பம்சம் உடையது.

பேட்டரி சிறப்பம்சம்

ஓப்போ கே 13 5ஜி ஸ்மார்ட்போன் 7,000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது. 80W அதிவேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. அதாவது, அரை மணிநேரத்தில் 62% சார்ஜ் ஆகிவிடும் என ஓப்போ குறிப்பிடுகிறது.

இரு பக்கங்களிலும் ஒலிப்பெருக்கி உள்ளது. தூசு படிவதைத் தவிர்க்கும் வகையில் IP65 துசு தடுப்பான் பொருத்தப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

ஓப்போ கே 13 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்நாப்டிராகன் 6வது ஜெனரேஷன் புராஸசர் கொண்டது. 256GB நினைவகத் திறனுடையது. 8GB செயலிகளுக்கான நினைவகம் கொண்டுள்ளது.

பயன்படுத்தும்போது உழிழப்படும் வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் 6000mm² திறனில் கிராஃபைன் தாள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெப்பம் ஏற்படாது. ஏற்பட்டாலும் நீண்ட நேரத்துக்கு இருக்காது.

இந்திய சந்தைகளில் ரூ. 17,999-க்கு ஓப்போ கே 13 5ஜி கிடைக்கிறது. இது 8 GB - 128 GB நினைவகம் கொண்டது. 8GB - 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டுமெனில் ரூ. 19,999 செலுத்த வேண்டும்.

கருப்பு மற்றும் ஊதா என இரு வண்ணங்களில் கிடைக்கிறது. ஏப். 25 முதல் முன்பதிவு செய்யலாம்.

இதையும் படிக்க | ரெட்மியின் புதிய ஸ்மார்ட் வாட்ச்! சிறப்புகள் என்னென்ன?

ஜென்சோல் இன்ஜினியரிங் பங்குகள் 5% சரிவு!

புதுதில்லி: ஜென்சோல் இன்ஜினியரிங் பங்குகள், 5 சதவிகிதம் சரிந்து, அதன் லோயர் சர்க்யூட் லிமிட்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலை 4.98 சதவிகிதம் சரிந்து ரூ.111.6... மேலும் பார்க்க

பேங்க் ஆஃப் பரோடாவில் தனது மூலதனத்தை 2% அதிகரித்த எல்ஐசி!

புதுதில்லி: காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், அதன் பங்குகளை, 2 சதவிகிதம் அதிகரித்து, 7.05 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றரை வருட காலத... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.13-ஆக முடிவு!

மும்பை: டாலர் குறியீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும், அதனை தொடர்ந்து உள்நாட்டில் பங்குகளின் தொடர் எழுச்சியால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா உயர்ந்து ரூ.85.13 ஆக ... மேலும் பார்க்க

தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: தனியார் துறை வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியின் வலுவான 4-வது ஆண்டு வருவாயால் உந்தப்பட்டு, பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று தொடர்ந்து ஐந்தாவது அமர்வாக தங்கள் வெற்றிப் பாதையை ந... மேலும் பார்க்க

ரெட்மியின் புதிய ஸ்மார்ட் வாட்ச்! சிறப்புகள் என்னென்ன?

ஸியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் வேகமான வாழ்க்கை முறையைக் கொண்ட பயனர்களைக் குறிவைத்து இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க

சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம்! உலகில் முதல் நாடு...

உலகில் முதல் நாடாக 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த சேவையை ஹவாய் மற்றும் சீனா யூனிகாம் இணைந்து செயல்பாட்டுக்... மேலும் பார்க்க