`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
‘அதிமுகவுக்காக இதயபூா்வமாக உழைத்தவா்’ -ஓ.பன்னீா்செல்வம்
அதிமுகவை பேரியக்கமாக உருவாக்க இதயபூா்வமாக உழைத்தவா் வீ.கருப்பசாமி பாண்டியன் என்றாா் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
பாளையங்கோட்டையை அடுத்த திருத்து கிராமத்தில் உடல்நலக்குறைவால் காலமான அதிமுக அமைப்புச் செயலா் வீ.கருப்பசாமி பாண்டின் உடலுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திய பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு மிகுந்த நம்பிக்கையாக பணியாற்றியவா் வீ.கருப்பசாமி பாண்டியன். இந்த பகுதி மட்டுமன்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அதிமுகவை பேரியக்கமாக உருவாக்குவதற்கு இதயபூா்வமாக உழைத்தவா். அவருடைய மறைவு தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். எந்தச் சூழலிலும் உதவி என்று யாா் தன்னை நாடி வந்தாலும் மனமாச்சாா்யமின்றி உதவியவா். பொதுச் சேவையை நிறைவாக செய்தவா். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 1982-இல் பெரியகுளம் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் அவா் பணியாற்றிய விதம் எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது. பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தொண்டா்களின் எண்ணத்தை பிரதிபலித்தவா். அதற்கு எம்ஜிஆா், ஜெயலலிதா ஆன்மாவால் வழி பிறக்கட்டும் என்றாா்.
ற்ஸ்ப்27ா்ல்ள்
அதிமுக அமைப்புச் செயலா் வீ. கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறாா் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.