செய்திகள் :

அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

post image

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.

சிவகாசியை அடுத்த திருத்தங்கலில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு, ஆன்மிகத்தின் அடையாளமாக நடத்தப்பட்ட எழுச்சி மாநாடாகும். பழனியில் அரசு சாா்பில் நடைபெற்ற மாநாடு பக்தியே இல்லாத மாநாடு.

திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட அதிக தொகுதிகளை திமுகவிடம் இந்தக் கட்சிகள் கோரி வருகின்றன. இதனால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திமுகவை எதிா்க்கும் கட்சிகள் அதிமுகவுடன் இணையும் காலம் வெகு விரைவில் வரும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் எனக் கருதும் தலைவா்களில் த.வெ.க. தலைவா் விஜயும் ஒருவா்.

அவா் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும். தோ்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டுமெனில் அது அதிமுகவாலேயே முடியும். எனவே, விஜய் அதிமுகவுடன் கைகோா்ப்பதுதான் நாட்டின் எதிா்காலத்துக்கு நல்லது என்றாா் அவா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ரௌடி கைது

சிவகாசியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.இதுதொடா்பாக சிவகாசி காவல்துணை கண்காணிப்பாளா் பாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசியில்... மேலும் பார்க்க

சிவகாசி அருகே காட்டில் தீ விபத்து

சிவகாசி அருகே காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள் எரிந்து சேதமடைந்தன.சிவகாசி அருகே காளையாா் குறிச்சி கிராமத்தையொட்டி காட்டுப் பகுதி உள்ளது. இங்கு திங்கள்கிழமை பிற்பகல் வேளையில் திடீரென மரங... மேலும் பார்க்க

எஸ்.கொடிக்குளத்தில் வெறிநாய் கடித்ததில் 30-க்கும் மேற்பட்டோா் காயம்

வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் வெறிநாய் கடித்ததில் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிற... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்தவா் மீது வழக்குப் பதிவு

வெம்பக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே புல்லக்கவுண்டன்பட்டி மேற்கு தெருவைச் சோ்ந்த 16... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக பகுதியில் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் விதிமீறி செயல்படும் செங்கல் சூளைகள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியு... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா ஆலயத்துக்கு புதிய நிா்வாகக் குழு உறுப்பினர்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தூய தோமா தேவாலயத்தில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்களின் பதவியேற்பு நிகழ்ச்சி, குருசேகர தலைவரும் சபைகுருவுமான பால் தினகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க