செய்திகள் :

``அதிமுக கூட்டணி; எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில், சரியான முடிவு எடுப்பார்..'' - நடிகை கெளதமி

post image

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோயிலில் அ.தி.மு.க கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆண்டாளின் அழைப்பின் பெயரில் எதிர்பாராமல் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தியுள்ளேன். தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக-வினர், அதிமுக பரம்பரை வாக்காளர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளேன்.

கெளதமி

யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்ய காலம் உள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்.

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைய வேண்டும் என்பதிலும் அவர் சரியான முடிவு எடுப்பார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி ஆட்சி என குறிப்பிட்டதன் வார்த்தைகளின் அர்த்தம், பின்னணி குறித்து இந்த நேரத்தில் ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக., பாஜக கூட்டணி முடிவான பின்னர் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நடைபெறும் என்பதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மிக உறுதியாக இருக்கிறார். அதை நேற்று ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். மீண்டும் தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு திமுக-வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை வரவேற்பதா? போனால் போகட்டும் என‌ பொறுத்து விட்டு விடவா? எனத் தெரியவில்லை.

கெளதமி சுவாமி தரிசனம்

அடுத்த தேர்தலில் திமுகவை தலை நிமிர்ந்துகூட பார்க்க முடியாத அளவுக்கு முடிவு செய்தால்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நியாயமான மக்களாட்சி கொண்டு வந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இயலும்.

கூட்டணி குறித்து யார் என்ன சொன்னாலும் அது அவர்களுடைய கருத்து. வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலை பொறுத்தவரை கூடுதலான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டியுள்ளது.” என்றார்.  

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க

``ஈபிஎஸ் சுயமாக சிந்திக்கக்கூடியவர், பாஜக உடன் இறுதிவரை இருப்பாரா?'' - சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நே... மேலும் பார்க்க

``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்

பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் பேசிவருவதாவது...'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வ... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த... மேலும் பார்க்க