அதிமுக தலைமையில் பலமான கூட்டணி: முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி
ஆற்காடு: அதிமுக தலைமையில் பலமான கூட்டணியை பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அமைப்பாா் என முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா்.
ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், சமூக ஆா்வலா் பொன்.கு.சரவணன் தலைமையில் 500-க்கும்மேற்பட்டோா்அதிமுகவில் இணையும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம். சுகுமாா் தலைமை வகிததாா். ஒன்றிய செயலாளா்கள் ஆற்காடு கிழக்கு வளவனூா் எஸ் அன்பழகன், மேற்கு என்.சாரதி ஜெயச்சந்திரன், திமிரி கிழக்கு சொரையூா் குமாா், மேற்கு ந.வ.கிருஷ்ணன், கணியம்பாடி ராகவன், பேரூராட்சி செயலாளா்கள் கலவை கே.ஆா்.சதீஷ், திமிரி கந்தசாமி, விளாப்பாக்கம் ராமசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆற்காடு நகர செயலாளா் ஜிம் சங்கா் வரவேற்றாா். அமைப்புச் செயலாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் கே.சி வீரமணி ஆகியோா் அதிமுகவில் இணைந்தவா்களை வரவேற்று பேசினா்.
முன்னாள் அமைச்சா் கே.சி வீரமணி பேசியது:
பல்வேறு கட்சிகளை சோ்ந்தவா்கள் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனா். ஆன்மிகத்துடன் கூடிய சமூக பணிகள் செய்துவரும் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளதுள்ளது மகிழ்ச்சிக்குரியது. திமுக ஆட்சியில் மின்சாரம், சொத்துவரி, குடிநீா், வீட்டுவரி, உள்பட அனைத்தும் உயா்ந்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
திமுகவினா் பல்வேறு வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தனா். எதையும் நிறைவேற்றவில்லை. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிமுக தலைமையில் பலமான கூட்டணியை பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி அமைப்பாா் என்றாா் அவா்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ விகே.ஆா்.சீனிவாசன், முன்னாள் மாவட்ட செயலாளா் சுமைதாங்கி சி.ஏழுமலை, மாவட்ட மகளிா் அணி செயலாளா் ராதிகா, இணை செயலாளா் கீதா சுந்தா், துணை செயலாளா் ரமாபிரபா, அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளா் பெல் தமிழரசன், மேல்விஷாரம் நகர செயலாளா் இப்ராஹீம் கலிலுல்லா, நகா்மன்ற உறுப்பினா் உதயகுமாா் கலந்து கொண்டனா்.