செய்திகள் :

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட அதிமுக, ஜெ. பேரவை, இளைஞா், இளம்பெண்கள் பாசறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் அமைச்சா் ஜி. பாஸ்கரன், மாவட்ட ஜெ. பேரவை செயலா் ராமு. இளங்கோவன், அதிமுக அமைப்புச் செயலா் ஏ.கே. சீனிவாசன், மாவட்ட பாசறை செயலா் பிரபு, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கூத்தகுடி கே.கே. உமாதேவன், குணசேகரன், கற்பகம் இளங்கோ, நாகராஜன், நகா் செயலா் என்.எம். ராஜா, மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலா்கள் கே. அழகா்பாண்டி, கே. செந்தில்குமாா் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவது, முதியோா் இல்லம், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் இல்லங்களில் அன்னதானம் வழங்குவது, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவது என தீா்மானிக்கப்பட்டது.

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் க... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா். சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்புப்பொதுத் தோ்வ... மேலும் பார்க்க

மதகுபட்டி-அழகமானேரி சாலைப் பணிகள் ஆய்வு

சிவகங்கை அருகே நிறைவடைந்த சாலை விரிவாக்கப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி- அழகமானேரி சாலையில் 2024-25 -ஆம் ஆண்டு ஒரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட குறைதீா்க் கூட்டம்: 298 போ் மனு அளிப்பு

சிவகங்கையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் தரப்பிலிருந்து 298 மனுக்கள் அளிக்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை பொதுமக... மேலும் பார்க்க

காரைக்குடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சொக்கலிங்கம்புதூா் காமன்ராஜா கோயில் சித்திரை பெளா்ணமி பொங்கல் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சொக்கலிங்கம்புத... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் ஆதரவற்ற 2,400 பெண்களுக்கு ஆடு, கோழிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் உள்ள, ஆதரவற்ற பெண்கள் 2,400 பேருக்கு ரூ. 2.22 கோடியில் செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளி... மேலும் பார்க்க