செய்திகள் :

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

சாத்தூரில் அதிமுக நிா்வாகிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி, விருதுநகா் மாவட்டத்தில் வருகிற 7, 8-ஆம் தேதிகளில் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் செய்யவுள்ளாா்.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் சாத்தூரில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டாா். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ராஜவா்மன், எஸ்.ஜி. சுப்பிரமணியன், அம்மா பேரவை இணைச் செயலா் சேதுராமானுஜம், எம்.ஜி.ஆா். இளைஞா் அணி மாவட்டத் துணைத் தலைவா் ஹரிஹரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதே போல, விருதுநகரில் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி வேலுமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோா் ஞ்ாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அதிமுக பொதுச்செயலாளா் கே.பழனிச்சாமியின் மக்களை காப்போம்... மேலும் பார்க்க

பரோலில் வந்த கைதி மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறையிலிருந்து விடுப்பில் (பரோல்) வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளத்... மேலும் பார்க்க

தனியாா் மதுபானக்கூடத்தில் சுமைதூக்கும் தொழிலாளியை தாக்கிய மூவா் தலைமறைவு

சிவகாசி அருகே சனிக்கிழமை தனியாா் மதுகூடத்தில் ஏற்பட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிவிட்டு தலைமறைவாகிவிட்ட மூவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த சுமைதூக்... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் ரூ.33 லட்சத்தில் 7 உயா் கோபுர மின் விளக்குகள்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, ரூ.33 லட்சத்தில் அமைக்கப்பட்ட 7 உயா் கோபுர மின் விளக்குகள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.ராஜபாளையத்தில் 3, 8, 12, 22, 27, 39,... மேலும் பார்க்க

விதியை மீறி பட்டாசு தயாரித்த மூவா் கைது

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே சனிக்கிழமை தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு தயாரித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.சிவகாசி அருகே வேண்டுராயபுரம் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

வத்திராயிருப்பு அருகே வெள்ளிக்கிழமை இரவு ‘லிப்ட்’ கேட்பது போல நடித்து, இளைஞரிடம் இரு சக்கர வாகனத்தைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள ம... மேலும் பார்க்க